சாரு நிவேதிதாவின் ‘குறியியல்’ பங்களிப்பு: ரோஜாவின் பெயர் (2)

ரஜினியிடம் எனக்குப் பிடித்த விஷயம், சினிமாத் துறையில் அவர் ஒருத்தராவது எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையில்லாதவராக இருக்கிறார்.  இந்தக் கமலைப் பாருங்கள்.  எழுத்தாளன் என்ற பிச்சைக்காரப் பிழைப்பின் மீது எத்தனை பேராசை இருந்தால் ஒரு கமர்ஷியல் இயக்குனரான ஷங்கரை எழுத்தாளர் எழுத்தாளர் என்று ரெண்டு முறை சொல்லி அறிமுகப்படுத்துவார்?  அதுகூடப் பரவாயில்லை.  ஞானக்கூத்தன் இறந்த பிறகு வெளிவந்த அவர் பற்றிய ஒரு அஞ்சலி ஆவணப் படத்தில் கமல் தன் கவிதை ஒன்றைப் படிக்கிறார்.  வாராந்தரி ராணியில் கூட … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 2

இடமும் தேதியும் முடிவாகி விட்டது. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பேட்டை, பாண்டிச்சேரி. தேதி: நவம்பர் 8, சனிக்கிழமை. காலை பத்து மணி முதல் மாலை ஆறு வரை. இடையில் ஒரு மணி நேரம் மதிய உணவு. மதிய உணவு கல்லூரி வளாகத்திலேயே அளிக்கப்படும். காலை பதினொன்றரை அளவிலும் மதியம் மூன்றரை மணிக்கும் தேநீர் இடைவேளை, பதினைந்து நிமிடம். குறைந்த பட்ச நன்கொடை : 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ. சுமார் முப்பது ஐரோப்பியத் … Read more

ரோஜாவின் பெயர் – 1

ஊம்பர்ட்டோ எக்கோவின் நாவல்கள் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நான் அவரைப் படித்திருக்கவில்லை. ஃபூக்கோஸ் பெண்டுலம் நாவலை என்னால் படிக்க முடியவில்லை. ரோஜாவின் பெயரை ஒருமுறை பாதி படித்து விட்டு அலுத்துப் போய் விட்டு விட்டேன். ஆனால் அந்த நாவல் திரைப்படமாக வந்த போது பார்த்து மிரண்டு போனேன். இயக்கியவர், நான் எப்போதுமே பெரிதும் சிலாகிக்கும் ஃப்ரெஞ்ச் இயக்குனர் Jean-Jacques Annaud. Wolf Totem, Seven Years in Tibet படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ரோஜாவின் பெயர் … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்

வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் ஒரு சினிமா பட்டறை நடத்தலாம் என்று திட்டம். திருவண்ணாமலையில் நடந்தது போல. காலை பத்து மணிக்கு என் உரை ஆரம்பித்து விடும். மாலை ஆறு மணி வரை நடக்கும். சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை பார்வையாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கும் நேரம் ஒதுக்கித்தான் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். நவம்பர் எட்டாம் தேதி. சனிக்கிழமை. சென்ற ஆண்டு ஜெயமோகனின் கட்டண உரை பெங்களூரில் நடந்தது. நல்ல … Read more

என் மரணத்தை விரும்பும் அன்பர்கள்

நேசராஜ் என் நீண்ட கால நண்பர். தர்மபுரியில் வசிக்கிறார். அஞ்சல் துறையில் நான் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் நேசராஜ் அஞ்சல் துறையின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்தப் பதவி de facto Postmaster General மாதிரி. அதிகாரிகளை நடுங்கச் செய்யும் பதவி. நேசராஜ் தீவிர இலக்கிய வாசகர். அதனால் அவரும் நானும் அப்போதிருந்தே நண்பர்கள். இத்தனை காலத்துக்குப் பின்பும் அந்த நட்பு தொடர்கிறது. இப்போது அந்த நட்பு இன்னும் பலப்பட்டிருக்கிறது. அதேபோல் அவரது வாசிப்பும். ஃபேஸ்புக்கில் … Read more

பாராட்டும் பதிலும்…

கவிதையைப் படித்து விட்டு தோழி அனுப்பிய பாராட்டு: Congratulations Charu on your meritorious success. This victory is not a culmination but the inchoation of more radiant victories.May each work you pen illumine the path toward ever-illustrious achievements.  (This is what i would have sent immediately) தோழிக்கு என் நன்றிக் கடிதம்: ராஜா: டேய் மந்திரி ஏன்டா என்னைப் பாராட்டலே? மந்திரி: ஐயோ … Read more