ரூபாஸ்ரீயின் நூல் அறிமுகம்

என் நட்பு வட்டத்தின் முக்கியப் புள்ளியான ரூபாஸ்ரீயின் நூல் அறிமுகக் காணொலிகள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும். இந்தக் காணொலியில் ரூபாஸ்ரீ Tahar Ben Jelloun எழுதிய The Blinding Absence of Light என்ற அற்புதமான நாவல் பற்றி அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலின் விசேஷம் என்னவென்றால், இறை நம்பிக்கையில்லாதவனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய இரண்டு நூல்களில் இது ஒன்று. ரூபாஸ்ரீயின் மெஸேஜ்: Hi Charu,Hope you’re doing well… I recently finished reading This … Read more

frenzy, just frenzy…

கோக் ஸ்டுடியோவில் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இதைப் பாடிய பெண் ஃபரிஹா பர்வேஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஃபரிஹாவின் மிகத் தீவிர ரசிகன் நான். ஜோகி என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்.

ஒரு சிறிய கணக்கு

நான் மாதம் நான்கு தினங்கள் வெளியூர் சென்று விடுகிறேன். அப்போது சில நண்பர்களை என்னோடு வருவதற்காக அழைக்கிறேன். நான்கு நாட்கள் என்னோடு தங்கிப் பேசலாம். யாரை அழைத்தாலும் வேலை இருக்கிறது என்கிறார்கள். என் வயது எழுபத்து மூன்று. இன்னும் ஏழு ஆண்டுகள் இருப்பேன் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு தாராளமான காலம். இந்த ஏழில் வருடத்துக்கு ஒரு முறை நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள் என்றாலே எழு சந்திப்புதான் வருகிறது. இதன் காரணமாகவே, நான் அசோகமித்திரனை அவரது … Read more

தியாகராஜாவில் ஸ்ருங்கார ரஸம் உண்டா?

தியகராஜர் பிராமண வித்வான்களின் வழிபாட்டுக்குரியவர்.  அவரை ஏடாகூடமாக, ஸ்ருங்கார பாவனை கலந்து எதாவது எழதப் போய் அதை இந்த  மயிலை மாமாக்கள் ஏடாகூடமாக அர்த்தம் பண்ணிண்டு எதிர்க்க, உங்களுக்கு ஆதரவாக டி. எம் க்ருஷ்ணா, இந்து ராம் இத்யாதிகள் வந்தால் ஒரே அதகளம் ஆகலாம்.  பார்த்துக் கொள்ளுங்கள்.  பாலசுப்ரமணியன். டியர் பாலா சார், என் தியாகராஜாவில் எந்த ஸ்ருங்கார ரஸமும் இராது.  தியாகராஜர் ஆதி சங்கரர் போன்று கவித்துவத்தின் உச்சம் கண்டவர் இல்லை.  தியாகராஜரிடம் செயல்படுவது முழுக்க … Read more

துவேஷத்தின் நிழல்

அன்புத் தோழிக்கு, இவர் ஏன் இப்படி வரிந்து வரிந்து இந்தப் பிரச்சினை பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார் என்று நினைக்காதே. நான் வாங்கும் கெட்ட பெயர் பற்றித் தொடர்ந்து யோசிக்கும்போது என் வாழ்க்கை வரலாறே என் ஞாபகத்தில் நிழலாடுகிறது. இரண்டே சம்பவங்களைக் குறிப்பிட்டு இந்த soliloquyயை முடித்துக் கொள்கிறேன். 1.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலையில் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ணினேன். அப்போது கிருஷ்ணா பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை. ஆனால் அவரைப் பிடிக்கும். ஒரு … Read more