ஒரு அடிமுட்டாளின் விண்ணப்பம்!

சென்ற கட்டுரையில் என்னை உடல் கேலி செய்பவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருக்கிறார்கள், என் மனைவி உட்பட என்று எழுதியிருந்தேன். பிராமண நண்பர்கள் வருத்தப்படக் கூடாது. அபிராமணர் ஒருத்தர் கூட எனக்கு புத்திமதி சொல்லவோ, என்னை உடல்கேலி செய்யவோ முயற்சி செய்ததில்லை. எனக்கு புத்திமதி சொல்பவர் அனைவரும் பிராமணர். உடல்கேலியில் ஈடுபடுவோர் அனைவரும் பிராமணர். ஏன் என்றுதான் கேட்கிறேன்? இப்போது நான் தியாகராஜா நாவல் எழுதுவதைக் கிண்டல் செய்தவர் கூட பிராமணர்தான். மட்டுமல்லாமல் ஊரே கொண்டாடும் நல்லவர். என்னிடம் … Read more

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே திருமூலரின் மூன்றாம் தந்திரம், 13-ஆம் பிரிவில் (காயசித்தி உபாயம்) உள்ள பாடல் எண் 724 உடம்பை வளர்ப்பது சாதாரண காரியம்தான். அதே சமயம் சாதாரண காரியமும் அல்ல. இடைவிடாமல் உடம்பைப் பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஒரு வாகனத்தைப் பராமரிப்பது போன்றதுதான் இது. நம் உடலும் ஒரு வாகனம்தான். இதற்கு நான் இரண்டு பேரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். … Read more

பெரிய பிழை

ஒரு வாசகி கடிதம் எழுதியிருக்கிறார். சென்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தது Culotte இல்லையாம். அதன் பெயர் wrap skirt. சுருக்கமாக, wrap என்று சொன்னால் போதும். Draped skirt என்றும் ஒன்று உள்ளது. ஆனால் அது வேறு; wrap வேறு. இரண்டுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது. நீங்களே கள ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்களின் ஆடை விஷயத்தில் இது போன்ற பிழைகளை இதுவரை செய்ததில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பே தாங், ஜி ஸ்ட்ரிங் பற்றியெல்லாம் எழுதி … Read more

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்…

ॐ हा३उ हा३उ हा३उ, अहमन्नमहमन्नमहमन्नम्, अहमन्नादोऽहमन्नादोऽहमन्नादः। ஓம் ஹாஉ ஹாஉ ஹாஉ, அஹமன்னமஹமன்னமஹமன்னம், அஹமன்னாதோ ஹமன்னாதோ ஹமன்னாத ஹ்। வெள்ளை நாய் சரமாவின் தலைமையில் மற்ற நாய்கள் “ஓம்” மந்திரத்தை உச்சரித்து, உணவைக் கேட்கின்றன.                                      சாந்தோக்ய உபநிஷத் 1.12.1-5) வேதங்களில் அனைத்து நாய்களின் தாயாகவும், இந்திரனின் தூது நாயாகவும் கருதப்படும் சரமா என்ற நாய் வானத்தின் நாய் (Hound of Heaven) என்றும் வர்ணிக்கப்படுகிறது.  ஒருமுறை பாணிகள் என்ற அரக்கர்கள் இந்திரனின் ஒளிமயமான பசுக்களைத் … Read more

சொல்லித் தீரவில்லை (எதிர்க் கலாச்சாரம் -3)

ஒரு விஷயம் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. வள்ளலாரும் நானும் சமகாலத்தில் வாழ்கிறோம். வள்ளலாரை போலீஸ் கைது செய்கிறது. என்ன விஷயம்? வள்ளலார் சாருவைக் கத்தியால் குத்தி விட்டார். ஐயோ, என்ன இது, சாரு வள்ளலாரைப் புகழ்ந்து அல்லவா எழுதிக்கொண்டிருந்தார்? அது என்னவோ போங்க, சாருவின் TOV… TOVன்னா? தலையில் ஓத்த விதி! அந்த இசை விமர்சகர் விஷயத்திலும் இதேதான் நடந்தது. மிகவும் நல்லவர். பண்பானவர். அதிர்ந்தும் பேச மாட்டார். நானும் அவரைப் புகழ்ந்து புகழ்ந்தே எழுதியிருக்கிறேன். … Read more