ஒரு தூக்குக்கைதியின் வாக்குமூலம்

வணக்கம். நான் ‘ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்’ நூலின் ஆசிரியர் தூக்கு செல்வம்.இந்த நூல், வாழ்நாள் அனுபவத்திலிருந்து எழுதப்பட்ட ஒரு சிறைச்சாலை நினைவுக் குறிப்பு. இது மரண தண்டனைக் கைதிகள் அறையின் உள்ளே உள்ள வாழ்க்கையின் வடிகட்டப்படாத சாட்சியம். இது குற்ற உணர்வு, மனிதநேயம், நீதி, மனவருத்தம் மற்றும் சிறைச் சுவர்களுக்குப் பின்னால் உள்ள உயிர்வாழ்தல் ஆகியவற்றை ஆராய்கிறது. இது வெறும் குற்றம் அல்லது தண்டனையைப் பற்றிய கதை மட்டுமல்ல, நம்பிக்கை அரிதாக இருக்கும்போதும், காலம் உறைந்து … Read more

புத்தக விழா – 3

பழங்களில் எனக்குப் பிடித்தது எலந்தப் பழம். ஆனால் அது பரவலாகக் கிடைப்பதில்லை. புத்தக விழா நடக்கும் இடத்தின் மைதானத்தில் ஒரு அம்மாள் கூடையில் எலந்தப்பழம் விற்பார்கள். வருடா வருடம் புத்தக விழா நடக்கும்போது சமயம் கிடைக்கும்போது அதை வாங்கித் தின்பது வழக்கம். நேற்று புத்தக விழா முடிந்து வெளியே வந்து வாங்கும்போது போலீஸ் வந்து அந்தப் பெண்மணியை விரட்டி விட்டார். இருந்தாலும் என் நண்பர் அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து சென்று வாங்கிக் கொண்டு வந்தார். நாலைந்து பேர் … Read more

புகைப்படங்களும் தமிழரின் வரலாற்று உணர்வும்…

தில்லியின் அந்தப் பிரதான சாலையின் அப்போதைய பெயர் கர்ஸன் ரோடு.  இப்போது கஸ்தூர்பா காந்தி மார்க் என்று அழைக்கப்படுகிறது.  1978இல் நான் தில்லி சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் சேர்ந்த போது கர்ஸன் ரோட்டில் இருந்த பிராந்திய அலுவலகத்தில்தான் பணி செய்ய அனுப்பப்பட்டேன்.  அந்த அலுவலகத்தின் அடுத்தாற்போல் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் தி. ஜானகிராமன் குடியிருந்தார்.  அப்போது அவர் அகில இந்திய வானொலியில் அதிகாரியாக இருந்தார்.  அந்த கர்ஸன் ரோடு அலுவலகத்தில் நான் ஒரு ஆண்டு பணியாற்றினேன்.   ஒரே … Read more

ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் (குறுங்கதை)

அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு கிறுக்குவார்களே அப்படிக் கிறுக்குகிறது என்னிடம் உள்ள பேனா.  புத்தகங்களில் கையெழுத்திடும்போது நரம்பெல்லாம் வலிக்கிறது.  என் சிநேகிதி ஒருவர் பத்து இருபது பேனா வைத்திருப்பார்.  வழவழவென்று வழுக்கிக்கொண்டு போகும்.  எனக்கு பேனா தேவைப்படும்போதெல்லாம் அவரிடமிருந்து ஒன்றை வாங்கிக் கொள்வேன்.  ஆனால் ஒரு கட்டத்தில் அவர் “என் வாழ்வில் அதிக துயரத்தைக் கொடுத்தவர் நீங்கள்தான்” என்று சொன்னதால் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.  ஆனால் என்னோடு சிநேகமாக இருந்த எல்லா பெண்களுமே அந்த வார்த்தைகளைச் … Read more

இன்றைய புத்தக விழா (2)

இன்று மாலை நான் மிகவும் சோர்வுடன் தான் தெரிவேன். இரவு முழுவதும் ஒரு நிமிடமும் உறங்கவில்லை. தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கும் அவமதிப்பு காரணம் அல்ல. அந்த அவமதிப்பை என் நண்பர்கள் பொருட்படுத்தவில்லை என்ற வருத்தமும் துக்கமும்தான். பிரச்சினை என்னவென்றால், நான் மஹாத்மாக்களால் சூழப்பட்டிருக்கிறேன். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணும்படி நன்னயம் செய்து விடுங்கள் என்கிறார்கள். அவர்களும் அப்படியே வாழ்கிறார்கள். அறச்சீற்றம் என்பது கொஞ்சமும் இல்லை. ஜெய்ப்பூரில் ஒரு பிரிட்டிஷ்காரன் சீனியின் மீது இனவாத துவேஷத்தை வீசிய போது … Read more