இந்தியாவின் மிகப் பெரிய இலக்கிய விருது…
ஜெயமோகனின் இந்தப் பதிவை அவசியம் படித்துப் பாருங்கள். இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! | எழுத்தாளர் ஜெயமோகன்
ஜெயமோகனின் இந்தப் பதிவை அவசியம் படித்துப் பாருங்கள். இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! | எழுத்தாளர் ஜெயமோகன்
க்ளாடியேட்டர் 2-இல் அந்தக் காட்சி மறக்க முடியாதது. வட ஆஃப்ரிக்காவிலிருந்து அடிமையாகப் பிடிக்கப்பட்டு வந்த லூசியஸ் (ஹன்னோ என்ற பெயரில்), அரசர்களின் விருந்தின்போது அவர்களின் பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் வாள் சண்டையில் வென்ற பிறகு, பேரரசர் கேட்டா அவனிடம் “நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்று கேட்கிறான். லூசியஸ் நேரடியாகப் பதில் சொல்லாமல், வர்ஜிலின் Aeneid காவியத்திலிருந்து அந்தப் புகழ்பெற்ற வரிகளைச் சொல்கிறான்: “The gates of hell are open night and day; Smooth is … Read more
வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார். நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார். அந்த ஆண்டு விருதுக்குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார். வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக்கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க … Read more
மேற்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழியின் பொருள், பன்றிகளுக்குப் பன்றியே அதிபதி. அகிலனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போது சுந்தர ராமசாமி அகிலனின் எழுத்தை மலக்கிடங்கு என்று வர்ணித்தார். பிறகு ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தது. ஜெயகாந்தன் இலக்கியத்திலும் இல்லை, வணிக எழுத்திலும் இல்லை. ரெண்டுங்கெட்டான். நா. பார்த்தசாரதி மாதிரி. அகிலனை விடக் கொஞ்சம் தேவலாம். இப்போது வைரமுத்து. மேற்கண்ட வரிசையில் இது சரியான தேர்வுதான். இந்தத் தேர்வுகள் தமிழ் புத்திஜீவிகளின் பரிந்துரையின் பேரில்தான் வழங்கப்படுகின்றன. தமிழில் புத்திஜீவிகள் யார்? கமல்ஹாசன், … Read more
நாவலில் ஒரு இரண்டாம் பாகம் சேர்த்து முடித்து விட்டேன். பதினைந்து நாட்கள். இரவு பகலாக எழுதினேன். 50000 வார்த்தைகள் சுமாராக. பதிப்பகத்திடம் கொடுத்து விட்டேன். இந்த மாத இறுதிக்குள் புத்தகம் கைக்குக் கிடைக்கும். கெட்டி அட்டை. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னட்டையில் என் கையெழுத்தில் புத்தகம் பற்றி எழுதித் தரச் சொன்னார் வர்ஷா. ஜோடிப்புறாவுக்காக எழுதியது இது:
என்னுடைய புத்தகங்களை முதன்மைப்படுத்தி பதிப்பிக்க ஒரு புதிய பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் செல்வகுமாரின் கவிதைத் தொகுதியும், ரஸ்புடின் நிர்குணின் கவிதைத் தொகுதிகளும் கூட ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவரும். இப்போது மயன் மாளிகை என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதி இன்னும் இரண்டு வாரத்தில் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. மற்றபடி என்னுடைய எழுபது புத்தகங்கள் இதுவரை வந்தது போல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும். தொடர்ந்து அங்கிருந்தே கிடைத்து வரும். அதில் எந்த மாற்றமும் … Read more