மன்னிப்பு

இந்த உலகிலேயே அதிக முறை மன்னிப்பு கேட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். அநேகமாக தினமுமே ஒருவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். பெரும்பாலும் பெண்களிடம். இப்போது ஒன் ஆன் ஒன் என்ற கொடூரமான நிலைமைக்கு வந்து விட்டதால் ஒருத்தரிடம் மட்டுமே மன்னிப்புப் படலம் ஓடுகிறது. என் கவிதைகள் அனைத்துமே மன்னிப்புக் கவிதைகள் என்று சொல்லி விடலாம். மனைவியிடம் கேட்ட மன்னிப்புக்கு நட்சத்திரங்களை எண்ணி விடலாம். முந்தா நேற்று கூடப் பாருங்கள், எங்கோ ஒரு மேடையில் போகன் சங்கரின் கதை … Read more

மொழிபெயர்ப்பு மோசடி

நேற்று ஜெயமோகனின் இணைய தளத்தில் தனக்கு வந்த சில கடிதங்களை வெளியிட்டு அது பற்றித் தனது கருத்துகளை எழுதியிருக்கிறார் ஜெ. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை அது. அதில் வந்துள்ள கடிதங்களின் ஒருசில பகுதிகளை இங்கே தருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து என்னுடைய தீவிரமான செயல்பாடுகள் அனைத்துக்கும் காரணம், எந்தத் தனிப்பட்ட நபரின் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. இது பற்றி நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் யாருமே இதைக் கண்டுகொள்ளவே இல்லை. … Read more

சில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள்

இலக்கியமும் அதிகாரமும் என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இதற்கு முன்பு ஒருமுறை “மொழிபெயர்ப்புகளை முற்றாகப் புறக்கணியுங்கள்” என்று நான் எழுதியிருந்ததை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஊம்பர்ட்டோ எக்கோவின் ரோஜாவின் பெயர் நூலை நீங்கள் ஆங்கிலத்திலேயே படிக்கலாம்.  நீங்கள் நீண்ட காலமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்காமல் இருந்த ஒரு புத்தகம் தமிழில் வந்தால் அதை உடனடியாகப் படிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால் அந்த … Read more

இலக்கியமும் அதிகாரமும்

Intellectual snobs. தமிழவன்.  நாகார்ச்சுனன்.  எம்டிஎம்.  மூவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர்கள்.  காரணம், மூவர்.  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா.  முதல் மூவரிடமும் சிருஷ்டிகரத்துக்கான கடுகத்தனை மூலப்பொருள் கூட இல்லாததால் அப்படி ஆனார்கள்.  அவர்களிடம் இருந்ததெல்லாம் வெறும் பெயர்கள்.  நல்ல ஞாபக சக்தி மட்டுமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது.  அதை வைத்துக்கொண்டு அவர்கள் மேய்ந்ததையெல்லாம் செரித்துக் கொள்ளாமல் அப்படி அப்படியே வாந்தி எடுத்தார்கள்.  சூழல் நாறியது.  இந்த மூவரில் தமிழவன் மட்டும் புனைகதையிலும் வாந்தி … Read more

பெண் குழந்தைகள்

நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுக்க பலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கு – அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகப் போராடவோ குரல் கொடுக்கவோ யாருமே இல்லை. கீழ்க் காணும் செய்தியைப் படித்துப் பாருங்கள். பெண்களுக்கு ஆண்களை விட பெண்கள்தான் பெரிய எதிரி. A grandmother in Barkhedi village of Seoni Malwa in Narmadapuram district in Madhya Pradesh strangled her four-month-old granddaughter because she longed for a grandson, … Read more

ஃபூக்கோவின் குஞ்சாமணி

காலையிலேயே ஒரு நண்பர் ஃபோன் செய்து, ஒரு இத்தாலிய நாவலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். உங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாதே, என்ன செய்வீர்கள் என்றேன். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புக்கு எந்த மொழியும் தேவையில்லை, க்ரோக்கிடம் கொடுத்தால் போதும், இத்தாலிய மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து விடலாம் என்றார். அதோடு விட்டிருக்கலாம். விதி யாரை விட்டது? என்ன நாவல் என்று கேட்டுத் தொலைத்தேன். ஃபூக்கோவின் குஞ்சாமணி என்றார். ஐயோ. பயப்படாதீர்கள். க்ரோக்கிடம் போவதற்கு முன்னால் கூகிள் … Read more