ஏற்கனவே சொன்னதுதான். ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூல்களை நம்பி வாங்கலாம். கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்புகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் படித்த வரை அவரது மொழிபெயர்ப்புகளும் வாசிக்கக் கூடியவையே. கவிதைகளில் பெருந்தேவி. அவருடைய அக்கா மகாதேவி மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை.
நேற்று எழுதியதில் ஆடம்பரம் என்பதற்கு பதில் படாடோபம் என்றும் எழுதலாம். இன்னும் நன்றாக இருக்கும்.
இப்போது 899 ரூ. கொடுத்து வாங்கிய ரோஜாவின் பெயர் என்ற நரகலை என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்க்கப் பார்க்க வயிறு எரிகிறது.