லும்பன் சமூகம்: அராத்து

சாரு என்றாலே வம்புதான் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. அதாவது , அவருகிட்ட வச்சிக்கக்கூடாது, எதுக்கெடுத்தாலும் சண்ட போடுவாரு, திட்டிடுவாரு என்ற கருத்து சமூகத்தில் பலரிடமும் வேரூன்றி நிற்கிறது. ஆனால் சாரு, இதுவரைக்கும் நான் யார் வம்பு தும்புக்கும் போனதில்லை, மத்தவங்கதான் எங்கிட்ட வம்புக்கு வந்து சும்மா இருக்கும் என் சூத்தைக் கடிக்கிறார்கள் என்று கோபமாகச் சொல்கிறார். லலிதா ராம் என்பவர் எழுதியிருந்ததைப் பகிர்ந்து, அதற்கு பதிலளித்து நீண்ட கட்டுரை எழுதியிருந்தார் சாரு. அதனால் … Read more

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து கைதட்டி மகிழும் லும்பன்கள்!

டேய் அம்பி, நீ என்னை அண்ணாவாக பாவித்து என்னை “நீ” என விளித்திருப்பதால் நானும் உன்னை என் தம்பியாக பாவித்து டேய் என விளித்திருக்கிறேன். மற்றபடி உன்னை டேய் என்று திட்டி விட்டேன் என்று குதிக்காதே. பின்வரும் பதிவை செப்டம்பர் 30 அன்று எழுதியிருந்தேன்: ”இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை … Read more

கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா: அராத்து

ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதிய இந்தக் கட்டுரை என்னைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கியமானது. படித்துப் பாருங்கள். (புகைப்படம்: மது) கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா | அரூ

குறை கூறும் போது கவனம் தேவை…

டியர்சாரு,வணக்கம் எல்லாரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடுகுறுநாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். Pleasure of the Text ஐ உங்கள் எழுத்தில் மீண்டும் ஒரு முறை உணர்ந்து மகிழ்ந்தேன். திரு பாலசுப்ரமணியன் அவர்களின் கடிதத்தில், தாங்கள் எக்ஸ் பதிப்பகத்தின் ராயல்டியைப் பற்றி குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார். நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி! டாக்டர் முரளீதரன்

விதுர நீதி

விதுரர் மகாபாரதத்தில் அமைதியின் சின்னமாகக் கருதப்படுபவர் விதுரர். எப்போதும் அளவோடு பேசி, தர்மத்தைப் பாதுகாக்க முயன்றவர். ஆனால், அது அவர் அநீதியை எதிர்க்கவில்லை என்று அர்த்தமல்ல. மாறாக, அவர் தன் ஞானத்தையும், வார்த்தையின் சக்தியையும்ப் பயன்படுத்தி பலமுறை அநீதியை எதிர்க்கிறார். கோபம் என்றால் உணர்ச்சிவசப்படாமல் கோர்த்து நிற்கும் உணர்வு, அது அவருக்கும் இருந்தது – குறிப்பாக துன்புறுத்தல்களின் போது. இதற்கு சில முக்கியச் சான்றுகள்: அரச சபையில் துரியோதனன் திரௌபதியை அவமானப்படுத்தியபோது (வஸ்த்ராபஹரணம்), பீஷ்மர், திரிதராஷ்டிரர் போன்ற … Read more

விதுரனின் மனம்…

தங்கள் பதிலுக்கு நன்றி ஆனாலும் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து பதிப்பித்து, புத்தகங்களை விற்பனையாளருக்கு கடனில் அனுப்பி, வசூல் செய்து, விற்காத புத்கங்களை அஒரகளிடம்இருந்து திரும்ப பெற்று……இத்யாதி. இத்யாதிஅவர்களுக்கு வியாபாரத்தில் என்ன அழுத்தமோஅவர்கள் இன்னும்Diplomatic ஆக graceful ஆக, வயதுக்கும், உங்கள் ஆளுமைக்கும் Sensibilities மதிப்பு கொடுத்து அவர்கள் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளலாம். இது நீதி மன்றமானால் அவர்கள் தரப்பு சமாதானம் என்ன? நமது சமயத்தில் நாம் இருப்பது வானப்ரஸ்தம்  போகவேண்டிய வயது. உங்களது தியாகய்யர் புத்தகவிழாவுக்கு நாகரத்னம்மாள் இனத்தை … Read more