பிறந்த நாளிலிருந்து மூன்றாவது நாள்

3 பிறந்தநாளைச் சொன்னால் என்ன?சொல்லாவிட்டால் என்ன?அது ஒரு வெறுமையான நாள்,ஏன் அதைப் பிடித்துத் தொங்குகிறாய்?நீயும் நானும் ஒரு மதுக்கடையில்வைன் குடித்தபடி இது பற்றிப்பேசலாம்ஆனால் இந்தப் பிறந்தநாள்ஒரு பயனற்ற காகிதத்தில் எழுதப்பட்டமற்றொரு எண்ணிக்கை. 1நான் ஒரு தீர்க்கதரிசி,மதங்களை நம்பாதவன்.அதனால் புது மதத்தைஉருவாக்கவில்லை,என் தரிசனங்கள் சிலரின் பாதையைமாற்றினஅதனால் என் பிறந்தநாள் ஒருசிறிய வெற்றிஒரு குடிகாரனின்கடைசிச் சிரிப்பு மாதிரி. 2உன் பிறந்த நாளைநான் கொண்டாடுவேன்,ஏனென்றால்,எனக்கு நீஒரு பாழடைந்த பட்டணத்தில்எரியும்கடைசி தீபத்தைப் போல.

ஆறு குறுங்கவிதைகளும் மற்றொரு கவிதையும்

1. முதல் முத்தம் முதல் முத்தம் தந்தபோதுஅச்சம் பரவசம் கொன்றதுமுதல் முத்தம் கிடைத்தபோதுஉணர்வு மரத்து நின்றது 2. பயணம் நீ, நான், நட்சத்திரம், மரம், மலை, கடல், பூமி, கருந்துளை, புழு, பூச்சி, நாய், பூனை, சிங்கம், புலி, கரடி, அரசியல்வாதி, கோடீஸ்வரன், பிச்சைக்காரன், ரேப்பிஸ்ட், ஞானி, அஞ்ஞானி – எல்லோரும் பூஜ்யத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம் 3. சுழற்சி சாலை நடுவே பெருச்சாளிகொத்தித் தின்னும் காகம்பார்த்துச் செல்லும் மனிதர்கள் 4. இரு பூனைகள் ஒரு பூனை புறாவிடம்பேசிக்கொண்டிருக்கிறதுஒரு … Read more