மோகினிக்குட்டிக்குச் சொல்லவொரு கதை
“என்னவொரே கவிதை மயமாய்க் கொட்டுகிறாய்எனக் கேட்கும் மோகினீ…, “எந்த தேசம் போனாலும்அங்கே பெண்களையும்குழந்தைகளையும் தெருக்களையும்கவனிப்பேன்எங்கே குழந்தைகளும்பெண்களும் மகிழ்ச்சியாய்இருக்கிறார்களோ,எங்கே தெருக்களில் நாய்கள்அலைவதில்லையோ,அதுவே என் கனவு தேசம் அப்படி ஒரு தேசத்தைக் கண்டேன்பத்திரிகையில் செய்திகளே இல்லைபிரதமரின் வெளியுறவுச்செய்திகளும்சீதோஷ்ணநிலை அறிவிப்புகளும்மட்டுமே இருந்தனமருத்துவரும் யாருமில்லைபோலீஸ்கூட இல்லைஇரவுக் காட்சி சினிமாவுக்குப்போனபோது என் முன்னால்நின்றவர்தான் பிரதமர் என்றான்எனக்குப் பக்கவாட்டில் இருந்தவன்சினிமா முடிந்து பிரதமர்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த தேசத்தில் என்னால்எழுதவே முடியாதுநரகத்திலிருந்து மட்டுமேஎழுத முடியும்ஜாரின் ரஷ்யாவில்எத்தனையெத்தனை மேதைகள்எழுதினார்கள் நீ என்னோடு பேசினால்கவிதை நின்றுவிடுமென் மோகினிக் குட்டீ!!”