மன உளைச்சல்

நேற்று காலை ஏழரை மணிக்கு எனக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைப் பார்த்ததிலிருந்து ஒரே மன உளைச்சல். மரண பயத்தினால் அல்ல. அந்த மொட்டைக் கடுதாசியில் என் பெயரை சாரு நாயுடு என்று குறிப்பிட்டிருந்ததால். என் நைனா நாயுடு சமூகம் அல்ல. காட்டு நாய்க்கன் சமூகம். அம்மா நாட்டுக்கோட்டை செட்டி. காட்டு நாய்க்கன் எப்படி நாயுடுவாக ஆக முடியும்? மேலும், நான் இன அடையாளத்தையும், தேச அடையாளத்தையுமே மறுத்து வருபவன். நான் எப்படி சாதி அடையாளத்தை, அதிலும் என் … Read more

மிரட்டல்

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்தது. அது போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் போலீஸிடமிருந்து ஃபோன் வந்தது. இந்த விஷயத்தில் எனக்கு தமிழக அரசின் மீதும், அதிகாரிகள் மீதும், குறிப்பாக தமிழக போலீஸ் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. எனக்கு இந்த சினிமா நடிகனின் ரசிகக் குஞ்சாமணிகளின் மிரட்டல் பற்றி எந்தக் கவலையும் பயமும் இல்லை. காந்தி நகரில்தான் தினமும் தனியாக, போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல், வாக்கிங் போய்க்கொண்டிருக்கிறேன். ஏழரை மணிக்கு சரியாக … Read more

அன்பு மகன் வளனுக்கு…

வளன், தியாகராஜாவை எழுதுவது என் வாழ்வின் அற்புதத் தருணங்களில் ஆக உச்சமானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீயும் உடன் வந்தபடியே இருக்கிறாய். தியாகராஜரை சந்திக்கும் ஃப்ரெஞ்சுப் பாதிரி எத்தியனின் நிஜ வடிவம் நீதான். நீதான் தியாகராஜரை சந்திக்கிறாய். இன்றைய அத்தியாயத்தில் வளன் தியாகராஜரிடம் ஹேண்டலின் மெஸையாவைப் பாடிக் காண்பிக்கிறான். அதற்கு தியாகராஜர் என்ன எதிர்வினை செய்கிறார் என்பதை நீ நாவலில் வாசித்துக் கொள்ளலாம். நாவலின் முதல் வாசகனாக நீதான் இருக்கப் போகிறாய். எத்தியனிடம்தானே எத்தியன் இடம் … Read more

மூவாயிரம் ஆண்டுகளாய் ஒரே கதை!

ஏற்கனவே எழுதிய ஒரு சம்பவத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.  இடம், ஒரு பெருநகர். என் வாசக நண்பர் ஒருவர் என்னைக் காண வேண்டும், புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார்.  நான் தங்கியிருந்த இடத்துக்கு வரச் சொன்னேன்.  சுமார் முப்பது புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  எல்லாம் நான் எழுதிய நூல்கள்.  மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினார்.  அவருக்கு நாலைந்து சினிமா தியேட்டர்களும், ஒரு பஸ் கம்பெனியும் இருந்தது.  ஊரறிந்த கோடீஸ்வரர். வேசியிடம் கூட இப்படி … Read more

இன்று மாலை இலக்கிய சந்திப்பு

இன்று (1.10.2025) மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புத்தக மதிப்புரை மற்றும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்கிறேன். சந்திப்பு ஸூம் மூலம் நடக்கும். லிங்க் கீழே தருகிறேன். meet.google.com/pfd-wfjg-zjn

தியாகராஜா (நாவல்): வாசிப்புக்கான சில குறிப்புகள்

சுப்புடு மாதிரி பொளந்து கட்டீரீரே. எங்கு கற்றீர்? யார் குரு? வி. பாலசுப்ரமணியன் நான் தில்லியில் பத்தாண்டு காலம் வசித்த போது சுப்புடுவை அங்கே நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். மற்றபடி சுப்புடுவின் ஒரு வாக்கியத்தைக் கூட படித்தது இல்லை.  ஆனால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமர்சனம் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இப்போது அவர் கட்டுரைகள் கிடைத்தால் படிக்கக் கூடிய மனநிலை இருக்கிறது.  ஆனால் அவர் கட்டுரைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.  பாலா சார், உங்களுடைய ஒரு கேள்வியைப் … Read more