தள்ளுபடி விலையில் அராத்து நூல்கள்

அராத்து பிறந்த நாளை முன்னிட்டு தள்ளுபடி விலையுடன் அவருடைய புத்தகங்களை வாங்குங்கள்.30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை 1) புருஷன் நாவல்2) குட்டிமா நாவல்3) புஸ்ஸி, குறுநாவல்4) உண்மையான காதல், குறுநாவல்5) நிறமேறும் வண்ணங்கள்6) மந்தஹாசினி, குறுநாவல்7) Eccentric Frames, Novel அனைத்தும், அல்லது ஒவ்வொன்று வாங்கினாலும் 30% விலை குறைவாகக் கிடைக்கும், ஒரு நாள் மட்டும்! https://www.autonarrative.com/product-author/அராத்து-araathu/

The Outsider

The Outsider என்ற பெயரில் ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்திருக்கிறோம். அதன் முதல் காணொலியின் இணைப்பை கீழே தருகிறேன். படிப்பதை விட கேட்பது சுலபம். அதனால் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் கூட இதை நீங்கள் அறிமுகப்படுத்தலாம். ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆன்மீகவாதிகள் பேச்சின் மூலமாகத்தான் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்கள். தங்கள் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட படித்திராதவர்கள் எல்லாம் யூட்யூபர்களாக மிகுந்த செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். அரசாங்கமும் அவர்களை கவனிக்கிறது. கைது செய்கிறது. … Read more

மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்

உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள் என்ற தொகுதியின் இரண்டாம் பாகத்தை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். இது மொத்தம் நான்கு தொகுதிகள் வரும். ஏற்கனவே இரண்டு தொகுதிகள் பூச்சி – 1, பூச்சி – 2 என்ற இரண்டு தொகுதிகளாக ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. இன்னும் நான்கு தொகுதிகள். மொத்தமாக ஆறு தொகுதிகள். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தினந்தோறும் எழுதிய நாட்குறிப்புகளே பூச்சி. கொரோனா காலகட்டத்தில் எழுதியவை. இதில் இரண்டு கட்டுரைகளை இங்கே பகிர்கிறேன். … Read more

சலுகை விலையில் அடியேனின் புத்தகங்கள்

ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து பின்வரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது: வாசகர்களின் ஞாபக சக்தி அபாரமானது. “நீங்கள் உங்கள் தளத்தில் தள்ளுபடி அளித்து ஒரு வருடம் ஆகிவிட்டதே!” என்று ஒருவர் நினைவூட்டினார். “இல்லை, அவ்வளவு நாள் ஆகவில்லை” என்றேன். “சரி, போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். பார்த்தபோது, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது. அதனால், இன்று முதல் இம்மாதம் முடியும் வரை நீங்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை பற்றி அதிகமானோர் அறிந்து … Read more

உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்

இந்தப் புத்தகம் இன்னும் இரண்டு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும். அந்த நாட்குறிப்புகளிலிருந்து ஒரு நாள்: ஜூன் 8, 2020 இந்தத் தொடர் முடிந்து விட்டதாக நினைத்தேன்.  ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது.  என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று.  ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள்.  மூர்க்கன், முரடன் இப்படியான பல பட்டங்கள் என் மீது உண்டு.  என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் … Read more

ஏழைச் சாமி

1. கண்ணாயிரம் பெருமாள் சமீபத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார்.  பெருமாளின் நண்பர் ஒருவர் பிராணிநல ஆர்வலர்.  அவர் வீட்டில் ஒரு முயல் வளர்க்கிறார்.  அது தவிர தெருப் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடுவது நண்பரின் வழக்கம்.  அப்படி அவர் தெருவில் வளரும் பூனைகளில் ஒன்று டாஃபி.  பெண் பூனை.  கிடைத்த போது சாப்பிடுவதும், இனவிருத்தியில் ஈடுபடுவதும், குட்டிகளைப் போட்டு அவற்றைக் கொசுக்கள், நாய்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவதுமாக இருந்த டாஃபிக்கு ஒருநாள் வயிறு வீங்கியிருந்ததைப் பார்த்து மிருக … Read more