வையமேழும் கண்டேன்
செவிச்சே உணவுக்காகவும்பிஸ்க்கோ மதுவுக்காகவும்லீமா சென்றவன் ராணுவ அதிகாரியால்கை வெட்டப்பட்ட போதும்கித்தார் வாசித்துவிடுதலையின் பாடலைப் பாடியகலைஞனின் குருதி தோய்ந்தநிலத்தைக் காணசாந்த்தியாகோ சென்றவன் என்றோ ஒருநாள் கனவில் வந்தமேக்காங் நதி காணதாய்லாந்து சென்றவன் அந்த ஊர்சுற்றியின் பட்டியலில்இப்படி ஓராயிரம்நிலங்களிருந்தன இன்றுகடல்கடந்து எங்கும்சென்றானில்லை எழுத்தை விடநாடும் நகரமும் மேலென்றுதிரிந்தலையும்நீ இன்றுஇருந்த இடத்தில்இருந்துகொண்டிருப்பதன்காரணம் யாதென்று கேட்டதுமைனா வையமேழும் கண்டேனென்வையத்து நாயகியின்பின்கழுத்துத் தோகையிலேமுத்தம் பதிக்கையிலேஎன்றானவன்