2. நிழலிலி

1 வாழ்நாள் எல்லாம் எழுதுகிறேன் சிலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை 2 பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகக் குடித்தேன் குடிகாரன் என்றார்கள் தனிமையை விரட்டப் பெண்கள் நாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஆயிரம் நிழல்கள், ஆயிரம் கவலைகள் எனக்கே எனக்கென ஒருத்தி கிடைத்தாளில்லை கிடைத்தவளும் அன்பைக் கையிலெடுத்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி அடித்தாள் படுகாயமுற்றேன். 3 கேட்டதைக் கொடுக்கும் என் கர்த்தாவிடம் ’அதிகாலையின் ஆதவனைப் போல நிலவின் சஞ்சாரத்தைப் போல நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் போல தென்றலின் இனிமையைப் போல குழந்தையின் முதல் … Read more

நாமறுதல் – 1

நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்னவெல்லாம் பிடிக்காது என்று சொல்லி விளையாடும் ஆட்டமொன்றை ஆடினோம் முடிக்கும் தறுவாயில் சொன்னேன் மீண்டுமொருமுறை இதே ஆட்டத்தை ஆடினால் எனக்கு எதுவுமே நினைவிலிருக்காது தெரியுமல்லவா? எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது மட்டுமே ஞாபகங்களை நிறைத்துவிடுகிறது எனைத் தவிர மற்ற யாருக்குமே என்ன விருப்பு வெறுப்பென்பதெதுவும் எனக்குத் தெரியாது நானென்ன செய்யட்டும்? ஆட்டம் முடிந்ததும் ‘உன்னை ஒன்று கேட்டால் எனக்காகத் தருவாயா?’ என்றாய். நிச்சயமாகத் தருகிறேன் என்றதும் எனக்கே எனக்கென்று மட்டுமாய் ஒரு … Read more

ஒரு நவீனத்துவ காதல் காவியம்

Mariage d’Amour என்ற தலைப்பில் ஒரு நவீன காலத்துப் பாடல் உள்ளது. இதை சாப்பின் இயற்றியதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். இதை இயற்றியது Paul de Senneville என்ற ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர். இயற்றிய ஆண்டு 1979. இந்தப் பாடல் ஸிம்ஃபனி இல்லை. ஒரே ஒரு பியானோ. இந்தப் பாடலை பிரபலப்படுத்தியவர் பியானிஸ்ட் ரிச்சர்ட் க்ளேடர்மேன். க்ளேடர்மேன் பற்றிப் பல முறை எழுதியிருக்கிறேன். லிங்க்: https://www.youtube.com/watch?v=1ej1SI4BRv8 இதே பாடலை ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இசைத்திருக்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது நீங்கள் யாரும் … Read more

இசையும் சமூகமும்…

இந்தக் கட்டுரையை நேற்றைய கட்டுரையோடு சேர்த்து வாசிக்கலாம். பல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் ஏதோ ஆர்வக் கோளாறின் காரணமாக அல்லது விதியின் கோர விளையாட்டுகளில் ஒன்றாக திடீரென்று இலக்கியக் கதை எழுதலாம் என்று முடிவெடுப்பது உண்டு. இருநூறு ஜனரஞ்சக நாவல்கள் எழுதியிருப்பார்கள். அல்லது, ராஜேஷ்குமாருக்குப் போட்டியாக ஒரு எண்ணூறு நாவல் எழுதியிருப்பார்கள். ராஜேஷ்குமார் ஆயிரம் என்று நினைக்கிறேன். இளையராஜா அடிக்கடி சொல்லிக் கொள்வது போல ராஜேஷ்குமார் போல ஆயிரம் நாவல்கள் எழுதியோர் உலகில் யாரும் இலர். இளையராஜா பத்தாயிரம் … Read more

ஸிம்ஃபனி

கிரிக்கெட்டில் இன்னமும் ஐந்த நாள் ஆட்டம் இருக்கிறது அல்லவா, அதைப் போலவே ஸிம்ஃபனி என்ற இசை வடிவமும் இன்னமும் உருவாக்கப்பட்டு, ரசிக்கப்பட்டும் வருகிறது. நமக்கு மேற்கத்திய ஜனரஞ்சக இசை வடிவங்களே பரிச்சயமாக இல்லாததால் ஸிம்ஃபனி என்ற சாஸ்த்ரீய இசை வடிவம் இன்னமும் அதிக தூரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தின் கலாச்சார ரசனை பெருமளவுக்கு மாறி விட்டதும் ஒரு காரணம். இலக்கியத்தில் பார்த்தாலும் இந்த ரசனை மாற்றத்தைத் தெளிவாக உணரலாம். கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், … Read more

உல்லாசம்: கதையும் மொழியும்…

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான இலக்கியப் பத்திரிகை ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது.  கதையோ, கவிதையோ, நாவலிலிருந்து ஒரு பகுதியோ எதுவாகவும் இருக்கலாம்.  ஆனால் இதற்கு முன் வெளிவந்ததாக இருக்கக் கூடாது. உல்லாசம் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தை அனுப்பலாம் என எண்ணினேன்.  அது உயிர்மையில் வெளிவந்த போது அதைப் படித்த போது அடிவயிறு கலங்கியது என்று பலரும் சொன்னார்கள்.  ஆனால் அதை அனுப்ப முடியாது என்றாள் ஸ்ரீ.  காரணம், போட்டி விதிகளில் ஒன்று, போட்டிக்கு அனுப்பப்படும் கதை இதற்கு … Read more