புருஷனில் இதுவரை ரசித்தவை: ஸ்ரீராம் & சாரு

புருஷன் நாவலை மற்றவர்கள் படிக்கும் போது, அவர்களுக்கு வாசிப்பின்பம் குறையாமல் இருப்பதற்காக, சுருக்கமாகச் சொல்கிறேன். * குழந்தைகள் முன் குடிக்கும் நவயுக தம்பதிகள் பற்றிய விமர்சனம். *நேற்று சாரு சொன்ன, பேரிளம் மாதுக்கள், மதுக்கூடங்களில் செய்யும் அக்குறும்புகள் மற்றும் அவர்கள் பள்ளிப்பெண்கள் போல் பாவனை செய்து, உடுத்திக்கொள்ளும் உடைகளின் அபத்தம் பற்றிய நான்கு பக்கங்கள். * ஹொடொரோஸ்கி படங்களில் வரும் shamanism போன்ற ‘ஸ்பெஷல்’ மேகலாவை மீட்கும் கதையில், ‘ஸ்பெஷல்’, மேகலாவின் பிருஷ்டங்கள் பற்றிச் சொல்கிறான், LAS … Read more

பதினேழாவது அத்தியாயம் என்ற வெடிகுண்டு – புருஷன் பதிவுகள் – 3

கார்ல் மார்க்ஸின் சிந்தனை, அரசியல், தத்துவம் குறித்த ஒரு புகழ் பெற்ற கேலிச்சித்திரம் உண்டு. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், இம்மானுவல் காண்ட், நீட்ஷே, விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவவாதிகள் எல்லாம் ஒரு வட்ட மேஜையில் அமர்ந்து தத்துவம் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள். அந்த மேஜைக்குக் கீழே தாடி வைத்த ஒரு ஆள் வெடிகுண்டைப் பற்ற வைத்துக்கொண்டிருப்பார். அவர்தான் கார்ல் மார்க்ஸ். அம்மாதிரி புருஷன் நாவலில் ஒரு அத்தியாயம் வருகிறது. பதினேழாவது அத்தியாயம். ழழிழு என்ற கதாபாத்திரம் மானிடர்களிடம் பேசும் … Read more

மரபார்ந்த மொழியின் மரணம் (புருஷன் பதிவுகள் – 2)

1980களிலும் 1990களிலும் இருந்தது போன்ற ஒரு சிந்தனைத் தளம் தமிழ் எழுத்துலகில் இருந்திருந்தால் இந்நேரம் புருஷன் நாவலுக்கு எதிர்வினையாகவும் மதிப்புரையாகவும் இரண்டு மூன்று புத்தகங்களே வந்திருக்கும்.  ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அப்படி வந்தது.  ஸீரோ டிகிரிக்கு வந்தது.  விஷ்ணுபுரத்துக்கு வந்தது.  இன்னும் சில புத்தகங்களுக்கு வந்தது என்றாலும், புத்தகங்களைத் தவிரவும் ஒரு சிந்தனைத் திறப்பாக ஒரு கட்டுரை வந்தால் அதைத் தொடர்ந்து, அதை மறுத்தோ அதன் வழி சென்றோ ஒரு ஐம்பது கட்டுரைகள் வரும்.  அப்படியான ஒரு … Read more

Ryu Murakami, சாரு நிவேதிதா, அராத்து… (புருஷன் பதிவுகள் – 1)

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் ஹருகி முராகாமியை விட பல மடங்கு காத்திரமான எழுத்தாளர் ரியூ முராகாமி.  ஜப்பானில் ஹருகியின் புத்தகங்கள் வெளியானவுடன் இரண்டு கோடி பேர் வாங்குகிறார்கள் என்றால் ரியூ முராகாமியை ஒரு கோடி பேர் வாங்குகிறார்கள்.  ஆனாலும் ரியூ முராகாமி சர்வதேச அளவில் இன்னும் அத்தனை பிரபலம் ஆகவில்லை.  ஆகவும் மாட்டார் என்று தோன்றுகிறது.  ஏனென்றால், அவர் எழுதும் அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் சமாச்சாரங்களை உலகம் தாங்காது.  உலகம் அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் … Read more

புருஷன் நாவல் பற்றி

புருஷன் நாவலை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இத்தனை குறுகிய இடைவெளியில் இத்தனை முறை படித்தது இதுவே முதல் முறை. என்னால் ஒரு நாவலை இரண்டாவது முறை படிக்க இயலாது. மாரியோ பர்கஸ் யோசாவின் நாவல்களை மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து மீண்டும் படிப்பேன். வாசிப்பு இன்பத்துக்கு உதாரணம் மாரியோ பர்கஸ் யோசா. ஆனால் அராத்துவின் புருஷன் மாரியோ யோசாவையும் தூக்கி அடித்து விட்டது. இந்த ஒரு பத்தியைப் படித்துப் பாருங்கள்: என் எதிரே, … Read more

திறவாய்! திறவாய்! நின் தயவாலே… – செல்வா (செல்வகுமார் கணேசன்)

(செல்வா என்று அழைப்பதே சகஜமாக இருக்கிறது என்பதால் செல்வா என்றே குறிப்பிடுகிறேன். இந்தக் குறிப்பு ஒரு சிறுகதை போலவே இருக்கிறது. செல்வாவுக்கு உரைநடை வெகு லாவகமாகக் கைகூடுகிறது. அவர் எழுதப் போகும் தொடரின் முதல் அத்தியாயமாக இதைக் கொள்க. ஓரிரண்டு இடங்களில் க், ச் சேர்த்திருக்கிறேன் செல்வா. உதாரணமாக, பள்ளிகூடம் என்பதை பள்ளிக்கூடம் என்று ஆக்கினேன். ஆனால் ஒன்றிரண்டு இடங்கள்தான் என்பது ஆசுவாசமாக இருந்தது. எனவே இந்தப் பிரதியையே இறுதிப் பிரதியாக வைத்துக்கொள்ளுங்கள்.தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள். … Read more