நான்கு

1 நீ என் முதுகில் குத்திய காயம்என்றுமே ஆறப் போவதில்லைஉனக்கு உன்னைத் தவிரவேறு எது முக்கியம்,சொல்உன்னையே என் வாழ்வின்முதல் மனிதனாக நினைத்தேன்முதுமையைத் தொட்ட பின்னும்உலகப் பொய் வாழ்க்கையில்ஏன் மாய சுகம் தேடிஅலைகிறாய்?அனுபவித்தது போதாதா? 2 எல்லாம் சரிஎல்லாம் சரிகாமக்கனலில்கருகும் சருகாய்நியாயம் தொலைத்தேன் 3 ஏதென்று எடுத்துரைப்பேன்மோகினியின் நயனமும்தடமுலையும் கண்டால்அதுவே பெரும் விசாரமாகிசித்தம் கலங்கிப்பித்தனாகிறேன் 4 நீ ஒரு பாம்பின் நிழல்

புதிய வேடம்

1காதல்களைக் கடந்துவருகிறேன்.“நீயே என் கடைசி”என்பதானபழைய வசனங்கள்என்னையும் பிணைத்திருந்தன—அந்தக் கலைஞனைசந்திக்கும் வரை. ஒரு வேடம் களையும்போதுபழைய மண்ணின் தடம்அறவே அகல வேண்டும்,மணமும் மறைய வேண்டும்,புதிதாய்ப் பிறந்தவனாய்நிற்க வேண்டுமெனஅவன் சொன்னான். 2அவ்வண்ணமேஒருத்தியை செல்லமென,மற்றவளை மலரென,ஒருத்தியை மயிலென,இன்னொருத்தியை முத்தெனவேறு வேறு நிறங்களில்அழைக்கத் தொடங்கினேன். “நீயே கடைசி” என்பதைமனதில் கூட வைக்கவில்லை.3நேற்றின் பாரத்தைநாளையின் பதற்றத்தைகழற்றி வீசி,இந்தக் கணத்தைசுவாசித்துஆழ்கிறேன் ReplyForwardAdd reaction

காலம்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறுஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்றுபன்னிரண்டு பதின்மூன்று ……………………………………………………..அறுபது நொடிகள்ஒரு நிமிடம்ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் மூன்று நிமிடம்நான்கு நிமிடம் ஐந்து நிமிடம் ஆறு நிமிடம்ஏழு நிமிடம் எட்டு நிமிடம் ஒன்பது நிமிடம்பத்து நிமிடம் பதினோரு நிமிடம் பன்னிரண்டுநிமிடம் பதின்மூன்று நிமிடம்…………………………………………………………………..அறுபது நிமிடம் ஒரு மணிஒரு மணி இரண்டு மணி மூன்று மணிநான்கு மணி ஐந்து மணி ஆறு மணிஏழு மணி எட்டு மணி ஒன்பது மணிபத்து மணி பதினோரு … Read more

எக்கோலம் கொண்டாலும் ஏற்கும் திருமேனி

(இந்தக் கவிதையை நான் எழுதவில்லை. எனக்குள் ஒரு பேய் புகுந்து எழுதியது. அப்படித்தான் பேய் வேகத்தில் இதைத் தட்டச்சு செய்தேன். ) Cast Away திரைப்படத்தின் நாயகன் விமான விபத்தில் நடுக்கடலில் விழுந்து ரப்பர் மிதவையின் உதவியினால் ஆளில்லாத் தீவில் கரை சேர்கிறான்.  மரத்துண்டை மரத்துண்டோடு உரசி தீயைப் பெறுகிறான்.  மீன்களை சுட்டுத் தின்றே ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைத்துக் கடைசியில் பாய்மரப் படகு ஒன்றைக் கட்டி அங்கிருந்து தப்பித் தன் இடம் வருகிறான். ஐந்து ஆண்டுகளும் … Read more

சாகா வரமும் சாகும் வரமும்

பிராமணனொருவனுக்குசாகா வரம் தரும் கனியொன்றுகிடைத்ததுஅதை அவன் நல்லரசனிடம்கொடுத்தான்நல்லரசன் அதைத்தன்ஆசை மனையாளிடம்கொடுத்தான்மனையாள் அதைத்தன்ஆருயிர்க் காதலனுக்குவழங்கினாள்காதலன்சற்றும் யோசியாமல்வெகுநாள் மோகித்தநாட்டியக்காரியிடம்கொடுத்தான்நாட்டியக்காரி அதைநல்லரசனிடம் காணிக்கைசெய்தாள் அந்தக் கணமே அரசன்முடி துறந்துஆடை களைந்துதிகம்பரமாய்க் காடேகிசல்லேகனையில்உடல் துறந்தான் யார் செய்தது தவறென்றான்நண்பன்தெரியவில்லை, சொல்லென்றேன்பிராமணனிடமிருந்துவாங்கியிருக்கவே கூடாதுஅது சாகாவரம் தரும் கனியல்லசாகும் வரம் தரும் கனியென்றான்