தொலைபேசி எண்

அடையாள அட்டை நாற்பது வயது என்கிறதுபார்க்க அறுபதைத் தாண்டியவனாகத் தெரிந்தான்சிரியன்அருகே மகள், பதினான்கு வயதுமனைவியும் மற்றுமிரு மகள்களும் உண்டென்றான்நாட்கள் பலவாய் உணவில்லைபொய்யில்லை, பார்த்தாலே தெரிகிறதுஅகதி உதவி வேண்டி நிற்கிறான் ஒரு நாளில் முப்பது பேர்அதற்கு மேல் இல்லை என்கிறது எங்கள் விதிஉதவி வேண்டி வருவோரோ தினசரி முந்நூறு இவனை எப்படி வெளியேற்றுவது?முன்னுரிமையில் இவனே கடைசி.போரில் கணவனை இழந்துஇரண்டு மூன்று சிசுக்களோடுவரும் பெண்களெல்லாம் உண்டு எடுத்துச் சொன்னேன்ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினான்அதிலிருந்தது ஒரு தொலைபேசி எண் நகரத்தின் விபச்சாரத் … Read more

ஹம்ரா தெரு

பெய்ரூட்டின் பிரதான ஹம்ரா தெருநானும் அமல்ராஜும் நடந்து கொண்டிருக்கிறோம்ஒரு உணவு விடுதியின் வாசலில் அமர்ந்துஒரு ஜோடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅவர்களுக்கு எதிரே ஒரு பெண்தன் வலதுகரத்தை நீட்டிக்கொண்டிருக்கிறாள்பதின்மூன்று வயது இருக்கலாம்ஹிந்திப்பட ஹீரோயின் தோற்றம்ஜோடி அவளை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅதிர்ச்சியுடன் அமல்ராஜைப் பார்க்கிறேன்சிரியா என்கிறார்.

வீடற்றவர்கள்

எதிர்வீடு தனிவீடுசுற்றி ஒரு தோட்டம்நாலரை கோடி பெறும்ஒரு என்னாரய் வாங்கினான்பன்னிரண்டரை கோடிக்கு வீட்டின் வெளியே நடைபாதைஅதிலே ஒரு தார்ப்பாலின்அங்கே வசித்த இரு மூதாட்டிகள்வெளிகேட்டுக்குப் பூட்டு இல்லைதோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிசெடிகளுக்கு உயிர் கொடுத்தார்கள் என்னாரய்க்குமடியில் பணத்தின் கனம்மனசில் பூட்டின் கனம்இருவரையும் துரத்தி விட்டுகேட்டுக்குப் போட்டான் பூட்டு இப்போது செடிகள் எலும்புக்கூடுகள்தோட்டம் ஒரு பிணக்காடு நான் ஒரு மண்புழுபுழுதியில் புரள்பவன்ஏதும் செய்ய ஏலாதுஅறம் பாடினேன் ஆனால் எதிர்வீட்டு என்னாரய்அறத்தைப் பார்த்தான்அதற்கும் ஒரு பூட்டைப் போட்டுஎங்கோ போட்டான் தூக்கி…

நிரந்தரம்

ஒரு சிலை வைக்கலாம்என்றார் ஒருவர்வேண்டாம், மக்கள் மனதினிலே குடியிருப்பார்என்றார் இன்னொருத்தர். ‘சிலை வைத்தால் பட்சிகள் மலம் கழிக்கும்;மக்கள் மனதினிலே குடியிருப்பதும்நிச்சயமில்லை; இன்றிருப்பார் நாளையில்லை,ஒரு போத்தல் சீலே வைன் இருந்தால் நலம்’என்றேன் நான்.

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

வெளிவர இருக்கும் என் கவிதைத் தொகுப்பின் தலைப்பு. புத்தகம் வேர்ட் ஃபைலில் 400 பக்கம் வருகிறது. மொத்தம் 152 கவிதைகள். புத்தகம் அளவு பெரிதாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். விலையும் அதற்குத் தகுந்தாற்போல் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு இருநூறு பேர் வாங்கினால் மகிழ்ச்சி அடைவேன்.

புத்திர பாசமும் பத்திரப் பதிவும்

இன்று சமூக வலைத்தளம் ஒன்றில் என் நீண்ட கால நண்பரும், நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபனின் பின்வரும் குறிப்பைக் கண்டேன். ”ராக்கி பார்த்திபன் !என் மகன்என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் … Read more