அச்சத்தின் நிழலில்…

இன்றைய கவிதைநண்பனுக்கு அனுப்பினேன்கவிதை போகவில்லைஃபோனில் அழைத்தேன் ’கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்கவிதையிருந்தால் படி’ என்றான் மனையாள் பக்கத்தில் இருந்தாள்அவளருகில் இருந்துஎன் எழுத்தைக் கடை விரிப்பதுசாலை நடுவேமுஷ்டி மைதுனம் செய்வது போலஆனாலும்இன்றைய கவிதைகாதல் கவிதை அல்ல,தத்துவக் கவிதைஅச்சம் உதறிப் படித்தேன் ’மகிழ்ச்சியின் உச்சத்திலோஎல்லையற்ற துக்கத்திலோஇருந்தால்தான் கவிதைபிறக்கும்’ என்றாள்வாழ்வில் ஒரு புத்தகமும்படிக்திராத என் மனையாள்

Rumors

நானொரு மலர்த்தோட்டம் வைத்திருக்கிறேன்குருதியை நீராக்கிகனவுகளை வித்தாக்கிவளர்த்தேன்ஒவ்வொரு மலரும்என் இதயத்தின் பாடல்ஒவ்வொரு மணமும்என் ஆன்மாவின் மூச்சு தோட்டத்தில் சிலர்அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டுஅவர்களின் கண்கள் வியப்பில் மலர்கின்றனஅவர்களிடம் படிந்த மணம்வான்வரை செல்வதாகச்சொல்கிறார்கள் இந்தத் தோட்டம்வாழ்க்கையின் ரகசியத்தைப் பேசுவதாகபத்திரிகையில் பேசப்பட்டது அது ஒன்றும் ரகசியம் அல்லமலர்களும் மனிதர்களும்ஒரே மண்ணில் பிறந்தவை,துக்கத்திலும் மகிழ்ச்சியிலும்ஒன்றாக நெய்யப்பட்டவை.ஆனால்மலர் ஒரு கணத்தில் வாடுகிறதுமனிதன் தன் துக்கத்தின் கண்ணாடியில்மகிழ்ச்சியின் நிழலைத் தேடுகிறான்

காலைச் சிற்றுண்டி: ஜாக் ப்ரேவர்

ஜாக் ப்ரேவர் (Jacques Prévert, 1900-1977) ஃப்ரெஞ்ச் மொழியின் முக்கியமான கவிஞர். அவரது முதல் கவிதைத் தொகுப்பு Paroles (1946) பெரும் வரவேற்பைப் பெற்றது, அவரது தனித்தன்மை – அவரது மொழி எளிமையாகத் தோன்றும். ஆனால் ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும். பேச்சு வழக்கில் இருக்கும், ஆனால் இசைத்தன்மை கூடியிருக்கும். திரைப்படத்துறையில், Les Enfants du Paradis (1945) போன்ற படைப்புகளுக்காக அவர் புகழ்பெற்றார், இது பிரெஞ்சு சினிமாவின் மாஸ்டர் பீஸாகக் கருதப்படுகிறது. அவருடைய ப்ரேக்ஃபாஸ்ட் என்ற … Read more

Ripped jeans

ஏன் இப்படிக்கிழிந்த கால்சராய் அணிகிறாய்?’என்று கேட்கிறாள் ஒருத்தி நீ பிறந்தாய்படித்தாய்வேலை செய்தாய்காதலித்தாய்மணந்தாய்தாயானாய்மகனைப் பள்ளிக்கு அனுப்பினாய்வீட்டுக்கு அழைத்து வந்தாய்மகன் வேலைக்குப் போனான்காதலித்து மணந்தான்பேத்தி பிறந்தாள்கொஞ்சி மகிழ்ந்தாய்பள்ளிக்கு அனுப்பினாய்வீட்டுக்கு அழைத்து வந்தாய்எல்லாம் முடிந்துஉன் நினைவு மறையும் உங்கள் விதிகள்மீதுமூத்திரம் அடிக்க விரும்புகிறேன் விரும்புவதெல்லாம் செய்ய இயலாதுஅதற்குப் பதிலாகதொடை தெரியக்கால்சராய் அணிகிறேன்

ஆகப் பிடித்தவைகளின் பட்டியல்

ஆகப் பிடித்த புத்தகம்—பழைய காகிதத்தில்பழுப்பு நிற மணம் மறையாவார்த்தைகள் ஆகப் பிடித்த எழுத்தாளர்—காற்றில் கவிதைகளைச் சுருட்டி வீசுபவர். ஆகப் பிடித்த உணவு—என் அம்மை ஆண்டாளுக்குப் பிடித்தது ஆகப் பிடித்த மது—இரவை மறந்து சிரிக்க வைக்கும் திராட்சை ரசம் ஆகப் பிடித்த பொழுதுபோக்கு—மேகங்கள் தீட்டும் சித்திரங்களில்என்னை இழப்பது ஆகப் பிடித்த சினிமா—என்னை எனக்கே நினைவூட்டும்பாத்திரங்களின் சலனம் எல்லாம் சொன்னேன். ‘ஆகப் பிடித்த தருணம்?’என்றார் கடவுள், ‘ஒரு மலைவாசஸ்தலத்தில்,முன்னிரவு நேரத்தில்,நெருப்புக் கம்பளம் பரவி எரிய,பைன் தேவதாரு மரங்கள் மெல்லிய பாடல் … Read more