வலி உணரா மனிதர்கள்

ஒரு கல்லைப் போலஒரு பனிக்கட்டியைப் போலஎப்படி அவளால் முடிகிறது,எது நடந்தாலும் எதுவுமேநடக்காதது போல் இருக்க? பழைய கதவுகூடதிறந்து மூடப்பட்டால்கொஞ்சம் புலம்புமே? நான் அவளைப் பார்க்கிறேன்கையில் ஒரு தேநீர்க் கோப்பைஎப்போதும் நிறைந்து தளும்பும்புன்னகைஆனால் கண்கள் மட்டும்வெறுமையாகவீட்டு ஜன்னலில் மறந்து வைத்துவிட்டபழைய கண்ணாடி போல. ஒரு காலத்தில்,நானும் தெருவில்திருட்டுத் தொழில் புரிந்தவன்அடி வாங்கினால் வலி தெரியாதிருக்கமாட்டு வால் சூப் குடித்தவன். ஆனால் அவள்எந்தப் பள்ளியில் பயின்றாள்,வலி மரத்துப் போக? ஒருவேளை,ஒரு பழைய பெட்டியின்துருப்பிடித்த பூட்டுஎதையும் உணர மறந்து போகுமே,அப்படியா? அல்லது,அவள் … Read more

ஆதியிலே வார்த்தை இருந்தது

நான்வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்நட்சத்திரங்களின் தூசியைப் போல்அவை என்னைச் சூழ்கின்றனஎன் முன்னோரின் எலும்புகளிலிருந்துகாவியங்கள் செய்கிறேன் சில வார்த்தைகள் செத்து மண்ணோடுமறையசில தேய்ந்து கற்களாய் உருள்கின்றனசிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்என் உயிர் எரிக்கின்றன வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்துநம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்ஆனால் அவை மோதிஆயிரமாயிரம் ஆண்டுகள்பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது என் காதலிஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திருஎன்றாள்அந்த ஆறு வார்த்தைகள்என்னை மரணத்தின் கரையில் தள்ளியதுஅவளுடைய அடுத்த … Read more

துக்கம் பரவசம்

Adagio for Strings கேட்டுஉங்கள் கதைநாயகிமீளாத் துயரில் தோய்ந்தாளெனஎழுதியிருக்கிறீர்கள்.எனக்கோ அதைக் கேட்டால்ஆன்மாவில் பரவசம்அருவியெனப் பொங்கி வழிகிறதுஎன்றாள் என் தோழி.நான் சொன்னேன்:ஆனந்தமும், துக்கமும், பரவசமும்—ஒன்றே, வேறு இல்லை.பனிமலைகளின் பாதாள மௌனத்தில்,ஒரு நொடியின் நிழல்வாழ்க்கையின் நித்தியப் பொறியைத் தீண்டுகிறது.

மேலும்…

என் நண்பனின் தோழிதென்னாட்டுத் திரையுலகின் காமதேவதைஇளம்வயதில் இறந்து போனாள்தற்கொலையென்றார்கள்கொலையென்றார்கள்தற்கொலையென்றே உறுதியாய்நம்பினேன்ஒரு நட்சத்திரத்தின் தற்கொலையைப் போலஒரு நாய் அல்லது ஓநாயின் தற்கொலையைப் போலஒரு விருட்சத்தின் தற்கொலையைப் போலஒரு நதியின் தற்கொலையைப் போலஒரு நாகரீகத்தின் தற்கொலையைப் போலஒரு வனத்தின் தற்கொலையைப் போலஒரு இனத்தின் தற்கொலையைப் போலஒரு மொழியின் தற்கொலையைப் போலஒரு துறவியின் தற்கொலையைப் போலநிகழ்ந்தது அந்த தேவதையின் தற்கொலை அது தற்கொலையென்று நான்அறிந்தது எப்படியென்றால்நானும் தற்கொலை செய்து கொண்டபோதுஒரு நாளில் இரண்டு மூன்று கவிதைகள் எழுதுகிறேன்ஒரு நாளில் இரண்டு மூன்று … Read more

ஒன்றும் தெரியாத கண்ணாடி

வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்பிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்பிறகு வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைவாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மோட்டுவளை வாட்ஸப் மோட்டுவளை வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் மோட்டுவாட்ஸப் மோட்டுவளைஒன்றுமில்லை ஒன்றுமின்னஞ்சல்வாட்மின்மில்லை மின்வாட்ஸப் மோட்டுவளை மோட்டுவளை ஒன்றுமில்லைஒன்றுமில்மோட்டுவளைவாட்ஸப்ஸப்ஸப்ஸப்மோட்டுவஒன்றுமில் ஏய் நிறுத்து என்றொரு கீச்சுக்குரல்“ரெண்டு மணி நேரமாக உன்சாளரக்கம்பியில் அமர்ந்திருக்கிறேன்நீ என்னை கவனிக்கவில்லை, செல்கிறேன்”என்று சொல்லிப் பறந்ததுஅந்தத் தேன்சிட்டு

விமர்சகர்களுக்கு ஒரு பதில்…

கீழே வரும் நீண்ட குறிப்பை எழுதியவரின் பெயர் தெரியவில்லை.  அதை எனக்கு அனுப்பிய நண்பர் நான் இதற்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார்.  பொதுவாக இது போன்ற மட்டித்தனமான குறிப்புகளை நான் படிப்பதுகூட இல்லை.  தமிழ் சமூகம் எத்தனை ஃபிலிஸ்டைனாக இருக்கிறது என்பதற்கு இந்தக் குறிப்பு ஒரு உதாரணம்.  மிஸ்டர் சாரு நிவேதிதா! உங்கள் பதிவைப் படித்தபின், எழுத்தாளன் என்ற பெயரில் ஒரு அகம்பாவப் பிச்சைக்காரனின் கூப்பாடுதான் கேட்கிறது. தமிழ் மக்களை “புத்தகம் படிக்காதவர்கள்” … Read more