குமுறல்

கவிதையையும் விட்டு வைக்கவில்லையாஎனக் கேட்கிறான் சக கவிமெல்லிய புன்னகையுடன். உண்மைதான்கவிதை தீண்டாத வாழ்நாளில்இப்போதுஅகவை எழுபத்து மூன்றில்தினம் மூன்று கவிதைபொங்கி வழிகிறதுபுதுப்புனல் போல்அடக்க முடியாமல்.ஏதோவொரு குமுறலைகரையில் தணிக்க முயல்கிறது.ஆனால்எழுத எழுதகுமுறல் ஒரு பாறையாகமார்பில் கனக்கிறதுமேலும் கனக்கிறது.

காணவில்லை

எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்ததுஇது அதிசயமாபேரழிவாஅல்லதுகாலத்தின் மாய விளையாட்டாபேரழிவின் அடையாளங்கள் ஏதுமில்லைஆனால் மனிதர் யாரையும் காணோம் இல்லங்கள் மாளிகைகள் குடிசைகள்மௌனத்தின் மயானமாகக் கிடந்தனநேற்றைய மழையின் எச்சமாகசாலைகளில் நீர் தேங்கிகாற்றில் பழைய புத்தகத்தின் மணம்மறந்துபோன வாழ்க்கையை நினைவூட்டியதுஒரு ஈ எறும்பு எலி கூட இல்லைசெல்லப் பிராணிகளும் மறைந்தனபோக்குவரத்து அறிகுறியும் இல்லை நான் வளர்த்த பூனைகள்மூச்சு விட முடியாமல்எந்நேரமும் என் மீதுஅன்பைப் பொழிந்த என் மனையாள்யார் சுவடும் இல்லைஆனால் வாசலில் கோலம் மட்டும்அவள் விரல்களின் நினைவாய் நின்றதுஒவ்வொரு இல்லமாகப் பார்த்தேன்ஒரு … Read more

பெருமிதம் கொள்கிறேன்

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். சர்வதேச அளவில் எனக்கு நெருக்கமான கவிகள் ஒக்தாவியோ பாஸ், நிகானோர் பார்ரா, பாப்லோ நெரூதா, ஜாக் ப்ரேவர், செஸ்லா மிலாஸ் (Czeslaw Milosz), விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா (Wislawa Szymborska), வ்ளதிமீர் நொபக்கோவ், சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி, ஜோஸஃப் ப்ராட்ஸ்கி (Joseph Broadsky). இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இவர்களில் நிகானோர் பார்ராவும் நெரூதாவும் ஒரே தேசத்தவர்கள். அதை விட ஆச்சரியம் ஸிஸ்லோ மிலாஸும் ஸிம்போர்ஸ்காவும் ஒரே தேசத்தவர்கள். … Read more

நீர் மேல் நடக்கும் தேவதை: செல்வா

எங்களால் செல்வா என்று அழைக்கப்படும் செல்வகுமார் கணேசன் சுமார் இருநூறு கவிதைகளை எழுதியிருப்பார். ஆட்டோநேரடிவ் பதிப்பகத்தின் நிர்வாகி. வாசகர் வட்டத்தின் முக்கியமான நண்பர். அன்பின் மறு உருவம். அவருக்குக் கோபம் வந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். குரல் உயர்த்திக் கூட பேசியதில்லை. இவர் இந்த உலகில் எப்படி ஜீவிக்கிறார் என்றே இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் வேறு. அவர் எழுதிய கவிதை ஒன்றை இன்று கண்டேன். இதைப் படித்ததிலிருந்து … Read more

ஓர் அடிமையின் பாடல்

நான் யார்? நான் நல்லவனா கெட்டவனாரெண்டும் கலந்தவனாதெரியாதுஆனாலொன்றுநான் அடிமைஎப்படியென்று சொல்கிறேன் காதலிக்காக எதையும் செய்பவன் நீ என் காதலிஎன்னை விட்டுஅல்லது விடாமல்என் நண்பனையும் காதலித்தால்நானே உங்களுக்கு அறை ஏற்பாடு செய்வேன்பொஸஸிவ்னெஸ்?துளியுமில்லை பேரழகி நீ பார்க்க மயிலாக இருந்தாலும்மந்தியாக இருந்தாலும்பேரழகி என்பேன்‘பொய் சொல்கிறாய்’என்று நீ சொன்னால்என் காதை வெட்டிஉன் கையில் கொடுப்பேன் பிச்சை எடுத்து கொடுத்த கதை என் மகனார் தன் மனையாளைப் படிக்க வைக்கநாலு லகரம் கேட்டார்நான் பிச்சையெடுத்த காசுகொடுத்தேன்கல்லில் நார் உரிப்பதுபோல்ரெண்டு லகரம் உரித்தேன்பிறகு அலுத்துப் … Read more

மெய்யுணர்தல்

காலையின் இளம் வெயிலில்பாதைகள் என்னைத் தடுக்கி வீழ்த்துகின்றனகுண்டும் குழியுமாகஉன் இதயத்தின் காயங்கள்என் ஆன்மாவை உரசிநான் உன்னில் கரைகிறேன்மேட்டுக்குடி வீதிகளில்உன் மௌனமொரு மறைபொருள்என் கண்கள் இதுவரை காணாதவை பூக்கடையின் மல்லிகைபழக்கடையில் அடுக்கப்பட்ட பழங்கள்இளநீர் விற்பனை –’விலை எழுபது ரூபாய்’ என எழுதப்பட்ட அட்டை –பரந்து விரிந்ததொரு கிரிக்கெட் மைதானம்எல்லாமே இன்றுதான் மெய்வழிப்படுகின்றனஆனால்என் நடை உன் குரல் தேடி அலைகிறதுஒவ்வொரு அடியும் உன்னில் முடிகிறது ஓ, இங்கே பள்ளிக்கூடங்கள் வேறுஆடவரும் பெண்டிரும் தத்தம் குழந்தைகளைமோட்டார் வண்டிகளில் வைத்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்பெண்களின் … Read more