1.
’குடித்தால் உங்கள் மகன்
அழுகிறான், சின்ன வயதில்
அடித்தீர்களாம்’
என்றாள் மருமகள்.
இப்போதெல்லாம் குடித்தால்
நானும் அழுகிறேன்.
2.
கடும் பணத்தேவை
நண்பனை அழைத்தால்
ஐந்து லட்சம் வரலாம்
வராமலும் போகலாம்
அழைக்கவில்லை.
3.
சொந்த ஊர்
நூறாண்டுப் பழமை
ஆளரவம் இல்லை
பாங்கு சத்தம் கேட்கிறது.
4.
கவிதை, கலவி –
சொற்கள் தொட மறுக்கும்,
மௌனம் பேசும்.
5 மேகம்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
நீரோவியங்கள் உருமாறுகின்றன