கூழாங்கல் அல்ல, வைரம்…

என்னுடைய சிறந்த மாணவர்கள் என்று சீனியையும் ஸ்ரீயையும் சொல்ல வேண்டும்.  இவர்கள் இருவரும் என்னிடம் நேரடியாகக் கற்றவர்கள்.  வளன் தொலைவிலிருந்து கற்றவன்.  அவனுக்கு நான் வால்டன் பற்றியும் அதை வாழ்ந்து எழுதிய ஹென்றி டேவிட் தோரோ பற்றியும் கற்பித்த போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன்.  அப்போது அவன் கனவில்கூட கண்டிருக்க மாட்டான், பதினைந்து ஆண்டுகளில் அவன் வால்டனில் அமர்ந்து தோரோவையும் சாருவையும் நினைத்துக்கொண்டிருப்பான் என. இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று பாதிரியாராக இருக்கும் ஒருவர் … Read more

கைகளில் அடங்கிய பேரண்டம்

’உச்சக்கட்ட இன்பம் எது?’ ’பத்து பூனைகள், பத்து பெயர்கள்.லக்கி, டெட்டி, ஸிஸ்ஸி, கெய்ரோ,குட்டி கெய்ரோ, டைகர், ப்ரௌனி,வெல்வெட், ச்சிண்ட்டூ, ச்சோட்டூ.ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு உலகம் ச்சோட்டூ மடியில் ஏறுகிறதுகுட்டியான உரோமக் குவியலாக,மென்மையாக முணுமுணுத்தபடிஎன் மடியில் அமைதியாக உறங்குகிறது.’ ’உச்சக்கட்ட துயரம் எது?’ ‘ஸிஸ்ஸி டைகரைத் துரத்துகிறது,குரல்வளையைக் குதற முயல்கிறது.டைகர் டெட்டியை விரட்டுகிறது,டெட்டி ச்சோட்டுவை மிரட்டுகிறது.’

லயம்

அதிகாலைப் பறவைகள்உத்தரவின்றிப் பாடுகின்றன,காற்றில் இலைகள் அசைகின்றனசூரியன் உதிக்கிறது, மறைகிறது,நிலவு தேய்கிறது, வளர்கிறது,இயற்கை தன் தாளத்தில் ஆடுகிறது.பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்,அல்லதுஹெலிகாப்டரில் திருமணம் செய்யலாமா என்கின்றனர்உயிர்கள் இனப்பெருக்கம் செய்கின்றனமனிதர்கள் பணத்தைத் துரத்துகிறார்கள்,அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள்புகழின் மீது மயங்குகிறார்கள். ஆண்கள் பெண்களைத் தேடுகிறார்கள்ஆண்களும் பெண்களும் பால்பேதமில்லாமல்காதல் தோல்வியில் மனம் உடைகிறார்கள்உறக்கமின்மையில் உயிர் துவள்கிறதுவெறுப்பில் கொலைகள் பிறக்கின்றன.காமம் வெறியாகி வன்கலவியில் முடிகிறதுமற்றவர் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள்நோயில் வாடுகிறார்கள்நோய் முற்றிச் சாகிறார்கள்மகிழ்ச்சியில் நடனம் பிறக்கிறதுஇன்பத்திலும் துன்பத்திலும் பாடல் ஒலிக்கிறது. நாய் நன்றி நவில்கிறதுபூனை துயரத்தில் … Read more