காய்ன் லாக்கர் குழந்தைகள்

தோக்யோவில்பெண்கள் தனியாகக் குடிக்கிறார்கள்,கண்ணாடிக் கோப்பைகளில்தங்கள் தனிமையை உறிஞ்சி.தனியாக நடனமாடுகிறார்கள்,நியான் வெளிச்சத்தில்கூட்டத்தில் தொலைந்துதங்கள் நிழலோடு.தனியாக வாழ்கிறார்கள்,விபச்சார விடுதிகளுக்குச் சென்று,ஆண் விபச்சாரர்களின் வியர்வையில்தங்கள் வெறுமையை நிரப்ப முயல்கிறார்கள்.தனியாக நாய் வளர்க்கிறார்கள்.தனியாகக் குழந்தை பெற்று,காயின் லாக்கர்களில்கனவுகளோடு சேர்த்துத்தம் சிசுவையும்பூட்டிவிட்டுச் செல்கிறார்கள்.தனியாக,மௌனத்தின் கயிற்றில் தொங்குகிறார்கள்,அல்லதுதனியாகஓடும் ரயிலில் விழுகிறார்கள்.

ஒரு கண்ணீர் காவியம்

‘குடித்தால் அழுகிறான்நம் மகன்மருமகள் சொல்கிறாள்’என்றாள் மனையாள்.‘ஏன் அழுகிறான்?’‘சிறு வயதில் நீ அடித்தாயாம்.’இப்போது குடித்தால்நானும் அழுகிறேன்.

என் கவிதைகளை முன்வைத்து…(4)

ஜாக் ரூபோவின் (Jacques Roubaud) புகழ் பெற்ற கவிதையான ஆம்ஸ்டர்டாம் தெருவைப் படித்துப் பாருங்கள். மொழிபெயர்ப்பு தேவையில்லை. இவர் ஒரு கணிதவியல் அறிஞர். மேத்மேட்டிக்ஸ் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். Amsterdam Street goes down goes upGoes up and down it does, my streetI go up or go down Amsterdam StreetGo down go up my Amsterdam Street We say we go up say we … Read more

என் கவிதைகளை முன்வைத்து… (3)

Some thing black நாவலை முடித்து விட்டேன். வசன கவிதையிலான நாவல். ஆனால் எதுவுமே புரியவில்லை. ஒரு வார்த்தைகூட புரியாத வார்த்தை இல்லை. ஆனால் வாக்கியமாக எதுவுமே புரியவில்லை. கீழ் வரும் ஒரு பத்தியைப் பாருங்கள். Come down and sleep in this tree in this tree Push back the earth in this tree in this tree Scoop out the earth in this tree in this … Read more

என் கவிதைகளை முன்வைத்து… (2)

நேற்று எழுதியதன் தொடர்ச்சியாக இதைக் கொள்ள வேண்டும்.  1992ஆம் ஆண்டில் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை இயக்கி நடித்த போது நான் அகஸ்தோ போவால் (Augusto Boal) பெயரைக் கேள்விப்பட்டதில்லை.  ஆனால் நான் இயக்கியது போவாலின் இன்விஸிபிள் தியேட்டர் மற்றும் ஃபோரம் தியேட்டர் ஆகியவற்றின் செயல்வடிவம் என்பது பிற்பாடு தெரிந்தது.  எப்படியென்றால் – என் நாடகத்தை விமர்சித்தவர்கள் ஏதோ நான் பித்துக்குளித்தனமாக விளையாடிவிட்டு வந்ததாக எழுதினார்கள்.  என்னுடைய கலை இலக்கியச் செயல்பாடுகள் அனைத்துக்கும் கோட்பாட்டு ரீதியான … Read more