புத்திர பாசமும் பத்திரப் பதிவும்

இன்று சமூக வலைத்தளம் ஒன்றில் என் நீண்ட கால நண்பரும், நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபனின் பின்வரும் குறிப்பைக் கண்டேன். ”ராக்கி பார்த்திபன் !என் மகன்என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் … Read more

அப்படியா?

சீதாராம் கேசரி, காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்ஏன் என் கனவில் தினசரி வருகிறார்?அவருக்கும் எனக்குமென்ன சொந்த பந்தம்?இத்தனைக்கும் கேசரி எனக்குப் பிடித்தஇனிப்பு கூட அல்லகேசரி வளர்த்த நாய், மணிஅவர் இறந்ததுபோதுஅருகிலேயே அமர்ந்திருந்து கல்லாகிப் போனதுஅந்தக் கல் என் நெஞ்சில் இறங்கிதினமும் கனவில் வந்து பாரமாய் அழுத்துகிறது ஒரு டால்மேஷனைசரக்கு ரயிலில் அனுப்பி விட்டது ஒரு மனிதக் கூட்டம்வடநாட்டிலிருந்து வந்த ரயில்சென்னை செண்ட்ரலில் காப்பாற்றப்பட்டபோதுஅதன் கண்கள் என் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டன. இப்படி ஒன்றா இரண்டாஒரு நூறு கதைகளுண்டு இந்த … Read more

ஒரே ஒரு அதிசயம்

ஜூன் இறுதியில் கோவா செல்கிறேன்கூட்டமில்லை கொண்டாட்டமில்லைமழைகூட இல்லாத பருவம்மதுபான விடுதிகள் வெறிச்சோடி நிற்கும்இப்படிகோவாவே தனிமையில் மூழ்கி இருக்ககடல் மட்டும் நீலம் மாறாமல்அலைகளின் மொழியில் அதிசயம் பேசும்

சில குறுங்கவிதைகள்

1. ’குடித்தால் உங்கள் மகன்அழுகிறான், சின்ன வயதில்அடித்தீர்களாம்’என்றாள் மருமகள். இப்போதெல்லாம் குடித்தால்நானும் அழுகிறேன். 2. கடும் பணத்தேவைநண்பனை அழைத்தால்ஐந்து லட்சம் வரலாம்வராமலும் போகலாம்அழைக்கவில்லை. 3. சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைபாங்கு சத்தம் கேட்கிறது. 4. கவிதை, கலவி – சொற்கள் தொட மறுக்கும், மௌனம் பேசும். 5 மேகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதேநீரோவியங்கள் உருமாறுகின்றன