சூகர ராஜ்ஜியம்

க்ளாடியேட்டர் 2-இல் அந்தக் காட்சி மறக்க முடியாதது. வட ஆஃப்ரிக்காவிலிருந்து அடிமையாகப் பிடிக்கப்பட்டு வந்த லூசியஸ் (ஹன்னோ என்ற பெயரில்), அரசர்களின் விருந்தின்போது அவர்களின் பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் வாள் சண்டையில் வென்ற பிறகு, பேரரசர் கேட்டா அவனிடம் “நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்று கேட்கிறான். லூசியஸ் நேரடியாகப் பதில் சொல்லாமல், வர்ஜிலின் Aeneid காவியத்திலிருந்து அந்தப் புகழ்பெற்ற வரிகளைச் சொல்கிறான்: “The gates of hell are open night and day; Smooth is … Read more

ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி (2)

வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.  சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.  நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார்.  அந்த ஆண்டு விருதுக்குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார்.  வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக்கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க … Read more