இளிவரல்
ஒருபோதும்மனையாளிடம்என் எழுத்து பற்றிப்பேசுவதில்லைஒருநாள் கேட்டாள்‘ஏன் பதற்றம்?’ ’நந்தினிக்கு நாவலை முடித்து அனுப்ப வேண்டும்’ ‘உன் எழுத்தைப் பற்றிப் பேசாதே’
ஒருபோதும்மனையாளிடம்என் எழுத்து பற்றிப்பேசுவதில்லைஒருநாள் கேட்டாள்‘ஏன் பதற்றம்?’ ’நந்தினிக்கு நாவலை முடித்து அனுப்ப வேண்டும்’ ‘உன் எழுத்தைப் பற்றிப் பேசாதே’
அவள் என்ன சொன்னாலும்கேட்பேன்ஒன்றுதான் முடியவில்லைகவிதையெழுதுவதைநிறுத்துவது
1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறதுஎன்கிறான் பெருங்கவிஞன்’ஒரு பறவை வீழ்ந்தாலும்அதில் திட்டமுண்டுஇப்போது நடக்கும் என்றால் நடக்காதுஇப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான்நடந்தது அந்தச் சந்திப்புஈருடல் ஓருயிர் ஆனதுரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனதுபழைய காதல்இதுவும் அப்படியே நடந்தது 3 ஒவ்வொருவருக்கும்ஒரு பழக்கம்எனக்குப் பச்சை மிளகாய்ஒன்றுக்கு இரண்டுகடித்து உண்டால்தான்உணவு இறங்கும் 4 அவளைக் கண்டதும்பச்சை மிளகாயைத் துறந்தேன்காரணமா?உடையவர் சொன்னார்’பிறர் வலியைத்தன் வலியாய் உணர்பவனேவைணவன்’
ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் வெளியிடும் ஒவ்வொரு கவிதையும் ஏழெட்டு முறை திருத்தப்பட்டது. இறுதிப் பிரதியைப் பார்த்தால் அதற்கும் முதல் பிரதிக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூக்குரலுக்கும் அந்தக் கவிதையின் முதல் பிரதிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாருங்கள். ரேமண்ட் கார்வரின் பாணி இப்படித்தான் இருக்கும். படிமங்கள் இல்லாமல் நேரடியாக எழுதப்படுவது அவர் கவிதை. நீங்கள் எதை அதிகம் ரசித்தீர்கள் என்று எனக்கு எழுதுங்கள். இதையா? கூக்குரலையா? என் குமுறலைஎன் தனிமையைஎன் வாதையைஎன் மன உளைச்சலைஎன் … Read more
முதலாம் கூக்குரல்: வாதையின் நிழல்கள் என் குமுறல், முடிவற்ற கடலின் அலைகள்என் தனிமை, பாலைவன இரவின் குளிர்ந்த மௌனம்என் வாதை, பறவையின் முறிந்த சிறகுஎன் மன உளைச்சல், கற்களால் நிரம்பிய பாதை என் கண்ணீர், ஊழியில் மறைந்து போன கடலின் கதை இரண்டாம் கூக்குரல்: பாவங்களின் சுமை என் அடிமைத்தனம், இரும்புச் சங்கிலிஎன் துரோகம், நம்பிக்கையை உடைத்த கூர்வாள்என் மூர்க்கம், காட்டுத்தீயின் வெறிஎன் கீழ்மை, புழுதியில் மறைந்த புனிதம்என் பசி, தீராத பாலைவனத்தின் தாகம்என் மனப்பிறழ்வு, நிலைகுலைந்த … Read more
ஆசைப்பட்டதுஅதிகமாகவே கிடைத்ததுஇப்போதுஆசைப்படுவதை நிறுத்தி விட்டேன்