நான்கு

1

நீ என் முதுகில் குத்திய காயம்
என்றுமே ஆறப் போவதில்லை
உனக்கு உன்னைத் தவிர
வேறு எது முக்கியம்,
சொல்
உன்னையே என் வாழ்வின்
முதல் மனிதனாக நினைத்தேன்
முதுமையைத் தொட்ட பின்னும்
உலகப் பொய் வாழ்க்கையில்
ஏன் மாய சுகம் தேடி
அலைகிறாய்?
அனுபவித்தது போதாதா?

2

எல்லாம் சரி
எல்லாம் சரி
காமக்கனலில்
கருகும் சருகாய்
நியாயம் தொலைத்தேன்

3

ஏதென்று எடுத்துரைப்பேன்
மோகினியின் நயனமும்
தடமுலையும் கண்டால்
அதுவே பெரும் விசாரமாகி
சித்தம் கலங்கிப்
பித்தனாகிறேன்

4

நீ ஒரு பாம்பின் நிழல்