மூன்று கவிதைகள்

1.மௌனம் இதுவரை அறிந்த மௌனம் ரம்யம் நீ வந்த பிறகு அறியுமிந்த மௌனம் குருதி கொப்புளித்தோடும் ரணகளம் எத்தனையோ ஆயிரம் பேர் அறிந்த மௌனம் பாடிய மௌனம் துக்கித்த மௌனம் உடலைத் துறந்து உயிரை மாய்த்த மௌனம் ஏடுகளில் படித்ததுண்டு பாடல்களில் கேட்டதுண்டு வாதையாய் அறிந்ததில்லை சாட்சியாய் நகரும் நிலவே கூழாங்கற்களை அடித்து விளையாடி ஓடும் நதியே இலைகள் சலசலக்க சரசமாடிச் செல்லும் தென்றலே அவளிடம் இதை மறக்காமல் சொல்லி விடுங்கள் நானொரு சொல்லாகி சொல்லுக்குள் மறைந்து … Read more

(நீலம் இலக்கிய விழாவில் பேசியதை முன்வைத்து ஒரு கட்டுரைத் தொடர்) 1.சமூகப் போராளியும் எழுத்தாளனும்…

ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஒரு காட்சி. ஜூலியஸ் சீஸர் கொல்லப்பட்டதால் ரோமானியர்கள் பதற்றமடைகிறார்கள்.  அந்தக் கொந்தளிப்பான சூழலில் மார்க் ஆண்டனி அவனது பிரசித்தி பெற்ற இரங்கல் உரையை ஆற்றுகிறான்.  அந்த உரையின் காரணமாகத் தூண்டப்பட்டு கடும் கோபத்துக்கு ஆளான கூட்டம் ப்ரூட்டஸையும் அவன் நண்பர்களையும் கொல்லத் துடிக்கிறது.  நகரம் முழுவதும் கூச்சல் குழப்பம். இங்கே சின்னா என்பவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் இரண்டு சின்னா வருகிறார்கள்.  ஒரு சின்னா, சீஸரைக் … Read more

காற்று, இலை, நான்

காற்று  இலையை அசைக்கிறது அசைந்தாடும் இலையைப் பறித்து காற்றுக்குக்  காணிக்கையாக்குகிறேன் சமயங்களில் இலை என்னைப் பறித்து காற்றுக்குக் காணிக்கையாக்குகிறது காற்று இலை நான்

அனாகதம்

2 ஆள் நடமாட்டமில்லாத தெருவில்நடைபயிலும் பொழுது ஹலோ வணக்கம் என்றொரு குரல் சுற்றுமுற்றும் நோக்கினேன் யாருமே இல்லை பயந்து போனேன் பேய்கள் அதிகமிருக்கும் ஊரில் தான் நான் வளர்ந்தேன். பேய் அடித்துச் செத்தவர் பலர் அங்குண்டு. எனதொரு சகோதரிக்கே பேய் பிடித்திருக்கிறது மலையாளத்தில் கத்தினாள். மலையாளப் பேய் என்ற றிந்தோம் ஒரு புள்ளி விபரம்இந்த மகா நகரத்தில் பேய்களில்லைஎன்கிறது நகர மாந்தர் குறித்து பேய்களுக்குப் பேரச்சம் போலும்.என்றபோதும்யாருமற்ற  தெருவில் ஹலோ வணக்கம் கேட்டு வியர்த்துப் போனேன் மீண்டும் கேட்டது குரல் ஹலோ வணக்கம் அஞ்ச வேண்டாம் குனிந்து பாருங்கள் என்றது குரல் 3 ஒரு கூழாங்கல்லிலிருந்துதான் அந்தக் குரல் என்றறிந்து கொண்டேன் என்னை அறிந்தோரோ, வாசகரோவணக்கம் சொன்னால் காதில் விழாததுபோல் சென்றுவிடும் நான் அந்தக் கூழாங்கல்லுக்கு பதில் வணக்கம் சொன்னேன் கூழாங்கல்லோடு  பேசுவதுபுதியதோர் அனுபவமென்பதால் … Read more

எதுயெது முதல்முதல் (தொடர்ச்சி)

புள்ளிமானைப் போல்துள்ளிக் குதித்தபடியேநடக்கிறாய்இது முதல் எப்போதும்வெண்கல மணியாகக்கலகலத்துச் சிரிக்கிறாய்இது முதல் கலவி முடிந்துஒருநாள்குலுங்கிக் குலுங்கிஅழுதாய்பதறிய நான்நீ அடங்கியதும்கேட்டேன்‘பரவசத்தின் உச்சத்தைஇப்படித்தான்வெளிப்படுத்த முடிந்தது’என்றாய்அது முதல் ஒருநாள் முழுதினமும்என்னோடு இருந்தாய்நள்ளிரவில் விழிப்புக் கண்டுபார்த்த போது நீ இல்லைகுலுங்கிக் குலுங்கிஅழுதேன்அது முதல் தேனினும் இனிதுநின்நிதம்பச் சுவைஅது முதல் மோகமுள் யமுனாஇசையின்பரவசத் தருணமொன்றில்சொல்கிறாள் எனக்குசெத்துவிடத் தோன்றுகிறதென்றுஉன்னை நினைக்கும்போதெல்லாம் எனக்கும்அப்படியே தோன்றுகிறதுஇன்பத்தின் உச்சம் நீஇன்பத்தின் உச்சம் நீஇன்பத்தின் உச்சம் நீஇது முதல்இது முதல்இது முதல்

லிட்ரரி சூப்பர் ஸ்டாரின் இரண்டு புதிய புத்தகங்கள்

ல சென்ற ஆண்டு ஹிந்து பத்திரிகையின் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.  ஆங்கில வாசகர்கள்.  ஆங்கிலத்தில் உரையாடல்.  நந்தினியும் நானும்.  அந்தப் பார்வையாளர்களுக்கு என் பெயர் தெரியாது என்பதால் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.  இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டேன்.  தமிழில் நான் நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.  நான் தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார். பேசி முடித்ததும் என் நண்பர் வந்தார்.  “நீங்கள் உங்களைப் பற்றி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டது மிகவும் ரசக்குறைவாக இருந்தது, அப்படிச் சொன்னது எனக்குப் … Read more