அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

மேற்கண்ட நாடகம் மலையாள மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது. மொழிபெயர்ப்பு ரியாஸ் முஹம்மது. பொதுவாக என் மொழிபெயர்ப்பாளர்கள் யாருமே புத்தகத்தை மொழிபெயர்த்து முடிக்கும் வரை என்னைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு அது எனக்கும் பதிப்பாளருக்கும் போய் விடும். ஏதாவது தவறு இருந்தால் நான் பதிப்பாளருக்குத்தான் எழுத வேண்டி வரும். ரியாஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் தினந்தோறும் எனக்கு ஃபோன் செய்து சந்தேகங்களைக் கேட்டுக் கொள்வார். அவர் எனக்கு இறைவன் தந்த வரம். அந்தோனின் ஆர்த்தோ … Read more

கோமாளி ஆக்குதல்: அராத்து

தமிழ்நாட்டில் ஒரு நோய் இருக்கிறது. எதிராளியை, தன் கருத்துக்கு, ரசனைக்கு ஒவ்வாவதவர்களைக் கோமாளி ஆக்குவது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் எனச் சொல்கிறேன் என்றால், எல்லோரும் இதைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு திமுக ஒருவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது எனில், பதிலுக்கு எதிர்த்தரப்பு ஸ்டாலின் வாய் தவறதுலாகப் பேசிய விடியோவை பரப்பு பரப்பு எனப் பரப்பி அவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது. திமுக, அதிமுக இரண்டும் விஜயகாந்தை கோமாளியாகச் சித்தரித்தது நினைவிருக்கலாம். … Read more

என்னா சார் டல்லா இருக்கீங்க? (இன்னொருவர் தொடர்கிறார்)

இந்த அடையாறு காந்தி நகர் வீட்டுக்குக் குடிபெயர்ந்து மூணு நாலு மாதம் ஆகியிருக்கும். பழைய சாந்தோம் வீட்டின் தொடர்பு விடவில்லை.  அங்கே வளரும் பத்து பூனைகளுக்குமான உணவு போய்க்கொண்டுதான் இருக்கிறது.  உணவு இடும் வேலை அந்தக் குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் அந்தோனியினுடையது.  அதற்கும் அவருக்கு உரிய ஊதியம் கொடுத்து விடுகிறேன்.  எல்லாம் அவந்திகா மூலம் நடக்கிறது.  பணம் கொடுப்பது மட்டுமே நான். இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தோனி என் வீட்டுக்கு வந்தார், பொங்கல் பணம் வாங்குவதற்காக. … Read more

கண்களுக்குக் கீழே தொங்கிய பை – சிறுகதை

ப்ரியா என் வாசகி. ஐஐடியில் படித்தவள்.  அமெரிக்காவில் ஜாகை.  வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார் கணவர்.  கணவரும் ஐஐடி.  ஆனால் தங்க மெடல் வாங்கியவர்.  ப்ரியாவின் மாமியாரும் வீட்டோடு இருக்கிறார்.  மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.  ப்ரியாவின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்.  காதல் மணம் இல்லை.  பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம்.  ”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும், பைத்தியமாக அலைவதை விட செத்துப் போவது … Read more

புருஷன் நாவல் பற்றிய என் உரை

புருஷன் நாவல் பற்றிய என்னுடைய இந்த உரையை ஆற அமரக் கேளுங்கள். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நான் பேசிய உரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இதுபோல் இன்னொரு முறை இன்னொரு நூலுக்கு என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. இந்த உரை குறித்து ஒரு உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லாமல், எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாக இதுவும் கிடக்கும் என்றால் அது பற்றியும் எனக்குப் புகார் இல்லை. … Read more

சென்னை புத்தக விழா

சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தக விழாவைப் போல் இதுவரையில் என் வாழ்வில் வேறு எந்தப் புத்தக விழாவும் எனக்கு இந்த அளவு மனநிறைவைத் தந்ததில்லை. காரணம், இதுவரையில் நான் இளைய தலைமுறை குறித்து மிகுந்த அதிருப்தியில் இருந்தேன். இவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை, இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவில்தான் இருக்கிறார்கள் – இதுதான் இன்றைய இளைய தலைமுறை பற்றிய என் கணிப்பாக இருந்தது. இந்தக் கணிப்பு இந்தப் புத்தக … Read more