பெருமிதம் கொள்கிறேன்

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். சர்வதேச அளவில் எனக்கு நெருக்கமான கவிகள் ஒக்தாவியோ பாஸ், நிகானோர் பார்ரா, பாப்லோ நெரூதா, ஜாக் ப்ரேவர், செஸ்லா மிலாஸ் (Czeslaw Milosz), விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா (Wislawa Szymborska), வ்ளதிமீர் நொபக்கோவ், சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி, ஜோஸஃப் ப்ராட்ஸ்கி (Joseph Broadsky). இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இவர்களில் நிகானோர் பார்ராவும் நெரூதாவும் ஒரே தேசத்தவர்கள். அதை விட ஆச்சரியம் ஸிஸ்லோ மிலாஸும் ஸிம்போர்ஸ்காவும் ஒரே தேசத்தவர்கள். … Read more

நீர் மேல் நடக்கும் தேவதை: செல்வா

எங்களால் செல்வா என்று அழைக்கப்படும் செல்வகுமார் கணேசன் சுமார் இருநூறு கவிதைகளை எழுதியிருப்பார். ஆட்டோநேரடிவ் பதிப்பகத்தின் நிர்வாகி. வாசகர் வட்டத்தின் முக்கியமான நண்பர். அன்பின் மறு உருவம். அவருக்குக் கோபம் வந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். குரல் உயர்த்திக் கூட பேசியதில்லை. இவர் இந்த உலகில் எப்படி ஜீவிக்கிறார் என்றே இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் வேறு. அவர் எழுதிய கவிதை ஒன்றை இன்று கண்டேன். இதைப் படித்ததிலிருந்து … Read more

ஓர் அடிமையின் பாடல்

நான் யார்? நான் நல்லவனா கெட்டவனாரெண்டும் கலந்தவனாதெரியாதுஆனாலொன்றுநான் அடிமைஎப்படியென்று சொல்கிறேன் காதலிக்காக எதையும் செய்பவன் நீ என் காதலிஎன்னை விட்டுஅல்லது விடாமல்என் நண்பனையும் காதலித்தால்நானே உங்களுக்கு அறை ஏற்பாடு செய்வேன்பொஸஸிவ்னெஸ்?துளியுமில்லை பேரழகி நீ பார்க்க மயிலாக இருந்தாலும்மந்தியாக இருந்தாலும்பேரழகி என்பேன்‘பொய் சொல்கிறாய்’என்று நீ சொன்னால்என் காதை வெட்டிஉன் கையில் கொடுப்பேன் பிச்சை எடுத்து கொடுத்த கதை என் மகனார் தன் மனையாளைப் படிக்க வைக்கநாலு லகரம் கேட்டார்நான் பிச்சையெடுத்த காசுகொடுத்தேன்கல்லில் நார் உரிப்பதுபோல்ரெண்டு லகரம் உரித்தேன்பிறகு அலுத்துப் … Read more

மெய்யுணர்தல்

காலையின் இளம் வெயிலில்பாதைகள் என்னைத் தடுக்கி வீழ்த்துகின்றனகுண்டும் குழியுமாகஉன் இதயத்தின் காயங்கள்என் ஆன்மாவை உரசிநான் உன்னில் கரைகிறேன்மேட்டுக்குடி வீதிகளில்உன் மௌனமொரு மறைபொருள்என் கண்கள் இதுவரை காணாதவை பூக்கடையின் மல்லிகைபழக்கடையில் அடுக்கப்பட்ட பழங்கள்இளநீர் விற்பனை –’விலை எழுபது ரூபாய்’ என எழுதப்பட்ட அட்டை –பரந்து விரிந்ததொரு கிரிக்கெட் மைதானம்எல்லாமே இன்றுதான் மெய்வழிப்படுகின்றனஆனால்என் நடை உன் குரல் தேடி அலைகிறதுஒவ்வொரு அடியும் உன்னில் முடிகிறது ஓ, இங்கே பள்ளிக்கூடங்கள் வேறுஆடவரும் பெண்டிரும் தத்தம் குழந்தைகளைமோட்டார் வண்டிகளில் வைத்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்பெண்களின் … Read more

வலி உணரா மனிதர்கள்

ஒரு கல்லைப் போலஒரு பனிக்கட்டியைப் போலஎப்படி அவளால் முடிகிறது,எது நடந்தாலும் எதுவுமேநடக்காதது போல் இருக்க? பழைய கதவுகூடதிறந்து மூடப்பட்டால்கொஞ்சம் புலம்புமே? நான் அவளைப் பார்க்கிறேன்கையில் ஒரு தேநீர்க் கோப்பைஎப்போதும் நிறைந்து தளும்பும்புன்னகைஆனால் கண்கள் மட்டும்வெறுமையாகவீட்டு ஜன்னலில் மறந்து வைத்துவிட்டபழைய கண்ணாடி போல. ஒரு காலத்தில்,நானும் தெருவில்திருட்டுத் தொழில் புரிந்தவன்அடி வாங்கினால் வலி தெரியாதிருக்கமாட்டு வால் சூப் குடித்தவன். ஆனால் அவள்எந்தப் பள்ளியில் பயின்றாள்,வலி மரத்துப் போக? ஒருவேளை,ஒரு பழைய பெட்டியின்துருப்பிடித்த பூட்டுஎதையும் உணர மறந்து போகுமே,அப்படியா? அல்லது,அவள் … Read more

ஆதியிலே வார்த்தை இருந்தது

நான்வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்நட்சத்திரங்களின் தூசியைப் போல்அவை என்னைச் சூழ்கின்றனஎன் முன்னோரின் எலும்புகளிலிருந்துகாவியங்கள் செய்கிறேன் சில வார்த்தைகள் செத்து மண்ணோடுமறையசில தேய்ந்து கற்களாய் உருள்கின்றனசிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்என் உயிர் எரிக்கின்றன வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்துநம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்ஆனால் அவை மோதிஆயிரமாயிரம் ஆண்டுகள்பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது என் காதலிஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திருஎன்றாள்அந்த ஆறு வார்த்தைகள்என்னை மரணத்தின் கரையில் தள்ளியதுஅவளுடைய அடுத்த … Read more