மேல்கூரை மின்விசிறி

யுவதிகள்நாய்களையும் பூனைகளையும்தம் காதலரையும்தொட்டுகொஞ்சி விளையாடுவதைஅடிக்கடி காண்கிறேன்மோகினியிடம் கொஞ்சம்தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்என்னை இதுவரை யாரும்தொட்டு கொஞ்சி விளையாடியதில்லையென அவள்,நீதான் தொட்டவுடன் என்னைமேல்கூரை மின்விசிறியைப் பார்க்கவைத்து விடுகிறாயேஎங்கே விளையாடுவதுஎங்கே கொஞ்சுவதுபோடா இடியட்என்று சொல்லியென்கன்னத்தைக் கிள்ளினாள் சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்அன்றைய தினமும் அவள்மேல்கூரை மின்விசிறியையேபார்க்க நேர்ந்தது

தேனுகந்து பாடும் உன் அமுது

அவள் ஒரு பாடல் அனுப்பினாள்கேட்டேன்.நெஞ்சில் வந்து குடிகொண்ட நிலவுபரவசம் பரவசம் என்றதுஐயோ, இது சோகப்பாட்டு என்றாள்நான் சிரித்தேன் சோகமா? எங்கே இருக்கிறது?இசையில் சோகம் உண்டா?அது ஒரு பறவையின் றெக்கை,காற்றைத் தழுவி எல்லைகளைத் தாண்டுவதுகாதல் இசையின் நிழல்எப்போதும் தொடரும்எப்போதும் மாறும் இசை பிரபஞ்சத்தின் முதல் சொல்அதற்கு முன் மௌனம் கூட இல்லைசோகமென்று அவள் அழைத்தாலும்எனக்கு அது ஒரு மெல்லிய அழைப்புஎங்கோ ஒரு நட்சத்திரத்தின் கிசுகிசுப்பு. காதலும் இசையும் சொல்வதென்னவென்றால்.சோகம் ஒரு பெயர் மட்டுமேஆனால் பரவசம் தேன்மழைஎன் உயிரை உருக்கிநின் … Read more

நடனத்தில் ஒரு பிழை

”அண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்”  என்ற வரியில் ஒரு பெரிய பிழை உள்ளது. விகசிப்பு, விகாசம் என்றால் மலர்ச்சி என்று பொருள். சந்தேகப்பட்டுத்தான் நிகண்டில் பார்த்தேன். எனவே அந்த வாக்கியம் “அண்டத்தின் பிரமாண்டத்தில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்று வர வேண்டும். மூலத்தில் மாற்றி விட்டேன். யாரும் இது பற்றிக் குறிப்பிடாதது சற்றே வருத்தம். கவிதையில் இன்னொரு வாக்கியமும் சேர்த்திருக்கிறேன். “மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள்”. கவிதையைத் திரும்பவும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் … Read more

நடனம்

பொதுமக்கள் சேவைக்கான அரசு அலுவலகம்சிஸ்டம் வேலை செய்யவில்லையெனக்காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த மனிதர்களை நோக்கினேன்நாற்பது ஐம்பது பேர் இருக்கலாம்ஒவ்வொருவர் முகத்திலும்ஏதோ நோய்மையின் நிழல்மருத்துவமனை அல்ல அதுஆனாலும் அவர்கள் நோயாளிகளின்தோற்றம் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒருபோதும்வாய்விட்டுச் சிரித்துகாற்றுடன் கைகோர்த்துநிலவின் குளிர்மையில் திளைத்திருக்க மாட்டார்கள்பிறர் பசியின் வலியுணர்ந்து வெகுண்டிருக்க மாட்டார்கள்மலையடிவாரத்தின் தனிமையில் தோய்ந்திருக்க மாட்டார்கள்கவிதையுடன் மௌனித்துஅண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள் மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள் காதல்மிகக் கொண்டு முத்தமிட்டிருக்க மாட்டார்கள்கலவியின் பரவசம் கண்டிருக்க மாட்டார்கள்பிறர் துயர் கண்டு கசிந்திருக்க மாட்டார்கள்வாடிய … Read more

குமுறல்

கவிதையையும் விட்டு வைக்கவில்லையாஎனக் கேட்கிறான் சக கவிமெல்லிய புன்னகையுடன். உண்மைதான்கவிதை தீண்டாத வாழ்நாளில்இப்போதுஅகவை எழுபத்து மூன்றில்தினம் மூன்று கவிதைபொங்கி வழிகிறதுபுதுப்புனல் போல்அடக்க முடியாமல்.ஏதோவொரு குமுறலைகரையில் தணிக்க முயல்கிறது.ஆனால்எழுத எழுதகுமுறல் ஒரு பாறையாகமார்பில் கனக்கிறதுமேலும் கனக்கிறது.

காணவில்லை

எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்ததுஇது அதிசயமாபேரழிவாஅல்லதுகாலத்தின் மாய விளையாட்டாபேரழிவின் அடையாளங்கள் ஏதுமில்லைஆனால் மனிதர் யாரையும் காணோம் இல்லங்கள் மாளிகைகள் குடிசைகள்மௌனத்தின் மயானமாகக் கிடந்தனநேற்றைய மழையின் எச்சமாகசாலைகளில் நீர் தேங்கிகாற்றில் பழைய புத்தகத்தின் மணம்மறந்துபோன வாழ்க்கையை நினைவூட்டியதுஒரு ஈ எறும்பு எலி கூட இல்லைசெல்லப் பிராணிகளும் மறைந்தனபோக்குவரத்து அறிகுறியும் இல்லை நான் வளர்த்த பூனைகள்மூச்சு விட முடியாமல்எந்நேரமும் என் மீதுஅன்பைப் பொழிந்த என் மனையாள்யார் சுவடும் இல்லைஆனால் வாசலில் கோலம் மட்டும்அவள் விரல்களின் நினைவாய் நின்றதுஒவ்வொரு இல்லமாகப் பார்த்தேன்ஒரு … Read more