மலர்வனமானது மனம்

அவள்சொல்வது செய்வதுஎல்லாமேமன உளைச்சல்மன அழுத்தம்தந்துமனதை ரணகளமாக்கியது எல்லாம் புதிதுஇதுவரை கண்டதில்லைகேட்டதில்லை ஓடவும் முடியாதுமுதல்முதலாய்க் கண்ட தெய்வம் ஒருநாள் ஞாபகம் வந்ததுஅவள் சொன்னது’நீ என்னைக் குழந்தையாய்நடத்து’ நடத்தினேன்மலர்வனமாயிற்றுமனம்

La petite mort

அந்த மலையடிவாரத்தில்நாம்முத்தமிட்டுக்கொண்டிருந்த போதுநாமிருவரும்உயிருடனிருந்தோமென்றாநினைக்கிறாய்?

மொழி வழி

நினைப்பதைச் சொல்ல மொழி நானும் சொல்லி வந்தேன் நினைப்பதையே எழுதி வந்தேன் அப்படித்தான் நம்பி வந்தேன் எல்லோரும் என்னை நிர்வாண மனிதன் என்றார்கள் ஆனால் உன்னிடம் வார்த்தைகள் உறைந்த பனியாய் நிற்கின்றன எல்லோரிடமும்தான்

பெண்களும் பிராணிகளும்

என்னிடம் உரையாடும் மைனா பட்சியினம்தானென்றாலும் நல்ஞானமும் நேர்கொண்ட பார்வையுமுண்டு இன்று வந்து கேட்டது: ’பெண்களுக்கேன் பிராணிகளைப் பிடிக்கிறது?’ ஆயுள் முழுதும் பெண்களுடனே இருந்தும் அந்த வேற்றுக்கிரக ஜீவிகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை யென்றேன் ’அது ஒன்றுமில்லை பிராணிகள் கேள்வி கேட்பதில்லை’ யோசிக்கத் தொடங்கிய என்னை இடைமறித்து ‘நீயும் பிராணிதான்’ எனச் சொல்லிப் பறந்தது