சாருவின் கவிதைகளைப் படிக்கிறீர்களா?

அன்புள்ள சாரு,பணிச்சுமையால் வழக்கமாகச் சந்திக்கும் சில நண்பர்களை சில மாதங்களாகப் பார்க்கவில்லை.ஆனால், எப்போதாவது அவர்கள் போனில் அழைக்கும்போது, உங்கள் கவிதைகளைப் பற்றி “சாருவின் கவிதைகளை படிக்கிறீர்களா?” என்கிறார்கள்.  ஒன்றிரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்திருப்பேன்.  சில கவிதைகளைப் படித்துவிட்டு (எசக்) கவிதைகளை எழுதி பார்ப்பதுண்டு.ஆனால், என்னிடம் ஒரு தடுப்பாற்றல் இருக்கிறது.  நான் எல்லா கவிதைகளிலும் உட்புகுவதில்லை.  அதன் வாதையை, அல்லது இன்பத்தை வேண்டாம் என மறுத்து வெறும் வார்த்தைகளாக மட்டும் கடந்துவிடுவேன். அது லெளகீக வாழ்வில் சமநிலையைப் பேண … Read more

யோகா குரு சௌந்தரின் முதல் புத்தகம்: ஙப் போல் வளை

இதென்ன கெட்ட பழக்கம், “புக்கு போடறதெல்லாம்” என மனசுக்குள்ள இருந்து குரல் வந்த உடனேயே இந்த திட்டத்தை கை விட்டுருக்கனும், ஆனா புத்தி, சாதுர்யமாக இப்படி ஒரு பதிலை சொல்லியது.’ நீ யாருகூட சகவாசம் வச்சிருக்கியோ அந்த பழக்கம் தான உனக்கும் வரும், போ போய் பிரிண்டிங் வேலையப்பாரு’ -என ஆம். நம்ம சகவாசம் எல்லாம் எழுத்தாளர்களோடும், இலக்கிய தாதாக்களான சாரு டார்லிங் (வெறும் சாரு என அழைக்கக்கூடாது என கட்டளை) ,ஜெயமோகன் சார் ,எஸ்.ரா.சார் என, … Read more

கடைசி கலவி, கடைசி கவிதை

இறைவிஉனக்காக உன்னைப் பற்றியேஎழுதுகிறேன்பதிலுக்கு உன் ஒரு சொல்ஒரு கோடி நட்சத்திரங்களாய்என் மார்பில் உதிரும் ஆனால் இப்போதுஉன் பார்வையின் பாதை மாறி விட்டதுஎன் வார்த்தைகள்காற்றில் கரையும் எரிகற்கள் மூச்சு நிற்காமல் இருக்கவே எழுதுகிறேன்ஆனால்உனக்கு இது மூச்சு முட்டுவதாகஇருக்கிறதோ என்னவோ உனக்காக எழுதுவதைப்படிக்கிறாயாஎனத் தெரியாமல் எழுதிஎன்ன பயன் ஒவ்வொரு கலவியும்கடைசி கலவி எனஒவ்வொரு சொல்லும்கடைசி முத்தமெனஉன் நிழலில் விழுந்துமறைகிறது

ஒரு கனவின் துண்டிக்கப்பட்ட நிழல்

நிழல்களின் மௌனத்தில்அவள் வார்த்தைகள்’செக்ஸ் இனி வேண்டாம்நண்பர்களாக இருப்போம்’ காற்று தன் மூச்சை இழந்ததுஇதயத்தின் கதவுஒரு முடிவில்லா இருளில் மூடப்பட்டது. ’அப்படியானால்,நான் உன்னைத் தொட மாட்டேன்உன் புன்னகையின் நதியில் நீந்த மாட்டேன்உன் கண்களின் வானத்தில் பறக்க மாட்டேன்’ ஏன் என்றாள் கண்கள் கலங்க ஏனென்றால் நான் இருக்க மாட்டேன் உன் நினைவுகளில் மறையும் நிலவாவேன்

ஒரே ஒரு சொல்

நள்ளிரவில் இந்த மொட்டைமாடியில் தனித்திருக்கிறேன் கையில் வைன் உன் நினைவு என்னைப் பித்தனாக்குகிறது உன் ஒரே ஒரு சொல் என்னை மீட்டெடுக்கும் நீ நித்திரையில் இருப்பாய் இந்த வாதை தாங்க முடியவில்லை நட்சத்திரங்களோடும் நிலவுடனும் உரையாடுகிறேன் உன் ஒரு சொல் ஒரே ஒரு சொல் என்னுயிரைக் காக்கும்

கருணை கொள், இறைவி!

காதை அறுத்துக் கொடுத்தானாம் கழுத்தை அறுத்துக் கொடுத்தானாம் எல்லாம் தெரியும் நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேனென உனக்குத் தெரியுமா இல்லையா சொல் தெரிவதற்காக நான் செத்தால் உன்னைப் பார்க்க முடியாது அது ஒன்றே என்னைத் தடுக்கிறது இல்லாவிடில் அதையும் செய்து முடிப்பேன் என் தங்கமே