மனதால் நினைந்து…

’நீயெனைப் பிரிந்தால்உனக்கு இன்னொருத்திநீ சொல்வாய்,பிரேதங்கள் மீது நடந்து செல்வதாகஅந்தப் பிரேத வரிசையிலேநான் கிடப்பேன் கடைசியாக,இல்லையா?’ அடியேய்,நின் பெயரைமனதால் நினைந்துவாயால் சொல்லிநின்றேன் இருந்தேன்கிடந்தேன் திரிந்தேன் நாடாத மலர் நாடிநின் வாடாத மலர் அடிக்கீழ்வைத்தேன்கூடவேநினைந்து நைந்து கரைந்துருகிபுனைந்த என்கவிதை ஐநூறும் சாற்றினேன் இதற்கு மேலுமா சந்தேகம்?சரி, இனியொரு ஐநூறுபுனைவேன்அப்போதேனும்நம்புவாயாஎன் நந்தா விளக்கமே? (காலையிலிருந்து நம்மாழ்வாரையும் பெரியாழ்வாரையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதை இது. டி.எஸ். எலியட்டின் இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி டெக்னிக்கைப் பயன்படுத்தினேன். பல சொற்றடர்கள் இரண்டு ஆழ்வார்களிடமிருந்தும் பெற்றது.)

அதனாலே அவள் இறைவி

1 அவன் அவளிடம்ஒரு பாதகம் செய்தான்மன்னிப்பு கோரினான்ஆனால் மன்னிக்க முடியாததுஉறவை உடைக்கக் கூடியது கொலை, தற்கொலை—நிகழ்ந்திருக்கலாம்ஆனாலும் அறியாமல் செய்த குற்றம்கன்றைக் கொன்ற சோழனைப் போலகோவலனைக் கொன்ற சேரனைப் போல அவள் வார்த்தைகளால் தாக்கினாள்வசைகள் ஆன்மாவைக் கிழித்தன சோழனைப் போல் சேரனைப் போல்அவன் தன்னுயிரை மாய்க்க முடிவு செய்தான்சாகசமாய் மாத்திரைகள் வாங்கினான்நண்பனை அழைத்துகாலை பத்து மணிக்குஅவன் கவிதைகளை இணையத்திலிருந்துநீக்கச் சொன்னான்—பொய்யான காரணம் சொல்லி. காலையில் அவளிடம் வசை தின்றபோது“நான் உயிரை மாய்த்துக்கொண்டால்என்ன செய்வாய்?” என்றான்செத்துப் போவேன் என்றாள். அந்த … Read more

இனிமேல் கவிதை இல்லை…

என் எழுத்து எப்போதும் கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன. எவ்வளவு வலியையும் வாதையையும் எழுதினாலும் அது எல்லோரையும் சிரிக்கச் செய்தன. ஆனால் இப்போதைய கவிதைகள் வலி மிகுந்திருக்கின்றன. எழுதுபவனுக்கும் அது யாரைப் பற்றியதோ அவருக்கும். என் எழுத்து எப்போதும் உற்சாகத்தை மட்டுமே தர வேண்டும். அதனால் இப்போதைக்குக் கவிதைகளை நிறுத்துகிறேன். நேற்று எந்த நேரத்தில் ஒரு நண்பன் “ஏன் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பொதுவெளியில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டானோ அதுவே கவிதைக்கு முற்றுப்புள்ளி ஆகி விட்டது. ஏனென்றால், … Read more

சலிப்பு

வாசகனின் தற்கொலைக் கடிதம்வாசித்ததிலிருந்து தற்கொலை எண்ணம்நீரில் நனைந்த சிகரெட்டைப் போல்மனதில் புகைகிறது யோசிக்கும் வேளையில்வந்தமர்ந்த மைனாவிடம்சேதி சொன்னேன்சிறிது நேரம் மௌனித்த மைனாகாரணம் கேட்டது’எல்லாவற்றுக்கும் காரணம் உண்டா?பேரரசனாய் வாழ்ந்த ஹெமிங்வேஏன் தன்னை சுட்டுக் கொண்டான்?’ மேஜை மேலிருந்த மாத்திரைகளைக்காண்பித்தேன்சாகசம் செய்து வாங்கியவைவாழ்க்கையை முடித்து வைக்கும்சிறு வெள்ளைத் துண்டுகள் பார்த்து விட்டுச் சிரித்த மைனாதற்கொலைக் கவிதை எழுதுபவனெவனும்தற்கொலை செய்து கொண்டதில்லை என்றது ’உளறாதே, ஒரு நூறு உதாரணம் சொல்வேன்வுல்ஃப் பற்றித் தெரியாதா?தற்கொலை பற்றியே எழுதினாள்பல முறை முயன்றுகடைசியில் ஆற்றில் மூழ்கினாள்’ … Read more

குற்றமும் தண்டனையும்…

ஒவ்வொரு கவிதையும்கடைசி கவிதை என்கிறேன்இன்றுதான் வாக்களித்தேன்இதோ வந்திருக்கிறது ஒரு மரணத்தின் கவிதைமரணம் கூட கவிதையாக மாறுவதுவிபரீத ஆட்டம்தான் அவன் வயது இருபதுகாதல், கல்யாணம் எல்லாம் முடிந்ததுஒரு வருடத்தில் விலகி விட்டாள் மனையாள்இன்று அவனிடமிருந்து வந்த கடிதத்தில்மரணத்தின் மணம் ‘போதையில் செய்த பிழைபிழை அல்லமரண தண்டனைக்குரிய குற்றம்மன்னித்து விடு என்று கெஞ்சினேன்குடியையே விட்டு விடுகிறேன்என்று சத்தியமளித்தேன்எதுவும் நடக்கவில்லைஒரு மாதம் பார்த்தேன் இன்று மன அழுத்தத்துக்கானமாத்திரைகள் உட்கொண்டுநிறைய விஸ்கியும் குடித்தேன்நினைவு மங்குகிறதுவிடை பெறுவதற்குள்உங்களுக்கு இதை அனுப்ப வேண்டும்எவருக்கும் தீங்கு செய்ததில்லைஇவளுக்குப் … Read more

அரை நிமிட முட்டாள்தனம்

வேலையின் கயிறுகழுத்தை இறுக்கும் நிழல்ஆனால் அவளின் நினைவுமணலில் எழுதப்பட்ட மந்திரம்காற்றின் மொழியில் அலைகிறதுமறையாமல்மறுக்கப்படாமல். இம்சை செய்யேனென சத்தியமளித்தேன்பன்னிரண்டு மணி நேரம்ஒரு புனிதனைப் போல்ஒரு முட்டாளைப் போல்மௌனத்திலிருந்தேன்பிறகுமாலையின் மஞ்சள் நிறத்தில்சத்தியம் மீறிஃபோன் செய்தேன்அரை நிமிட உரையாடல்பைத்தியத்தின் பாலையில் விழுந்தநீர்த்துளிநட்சத்திரங்களாய் மாறுகிறது இந்த இம்சை இல்லாமல்விடுதலை எப்படி?நினைவுகள் பாசிபடிந்த கற்கள்கைகளில் பிடிபடாமல் நழுவுகின்றன நண்பன் கேட்கிறான்ஏன் உன் அந்தரங்கத்தைஉலகுக்குப் பகிர்ந்தளிக்கிறாய்? ஐம்பது ஆண்டுகளாய்அந்தரங்கத்தைத்தானே காகிதத்தில்வீசுகிறேன்?கவிதைக்குச் சலுகையில்லையா? வேப்பை இழுத்துவிட்டுபிரியத்துக்குரியவர்களுக்குஇம்சை கொடுக்காமல்வாழ்வது எப்படியென யோசித்தேன்ஆனால்அவள் நினைவு கத்தியைப் போல்மார்பைக் கிழிக்கிறது குதிரையின் … Read more