யோகா குரு சௌந்தரின் முதல் புத்தகம்: ஙப் போல் வளை

இதென்ன கெட்ட பழக்கம், “புக்கு போடறதெல்லாம்” என மனசுக்குள்ள இருந்து குரல் வந்த உடனேயே இந்த திட்டத்தை கை விட்டுருக்கனும், ஆனா புத்தி, சாதுர்யமாக இப்படி ஒரு பதிலை சொல்லியது.’ நீ யாருகூட சகவாசம் வச்சிருக்கியோ அந்த பழக்கம் தான உனக்கும் வரும், போ போய் பிரிண்டிங் வேலையப்பாரு’ -என ஆம். நம்ம சகவாசம் எல்லாம் எழுத்தாளர்களோடும், இலக்கிய தாதாக்களான சாரு டார்லிங் (வெறும் சாரு என அழைக்கக்கூடாது என கட்டளை) ,ஜெயமோகன் சார் ,எஸ்.ரா.சார் என, … Read more

கடைசி கலவி, கடைசி கவிதை

இறைவிஉனக்காக உன்னைப் பற்றியேஎழுதுகிறேன்பதிலுக்கு உன் ஒரு சொல்ஒரு கோடி நட்சத்திரங்களாய்என் மார்பில் உதிரும் ஆனால் இப்போதுஉன் பார்வையின் பாதை மாறி விட்டதுஎன் வார்த்தைகள்காற்றில் கரையும் எரிகற்கள் மூச்சு நிற்காமல் இருக்கவே எழுதுகிறேன்ஆனால்உனக்கு இது மூச்சு முட்டுவதாகஇருக்கிறதோ என்னவோ உனக்காக எழுதுவதைப்படிக்கிறாயாஎனத் தெரியாமல் எழுதிஎன்ன பயன் ஒவ்வொரு கலவியும்கடைசி கலவி எனஒவ்வொரு சொல்லும்கடைசி முத்தமெனஉன் நிழலில் விழுந்துமறைகிறது

ஒரு கனவின் துண்டிக்கப்பட்ட நிழல்

நிழல்களின் மௌனத்தில்அவள் வார்த்தைகள்’செக்ஸ் இனி வேண்டாம்நண்பர்களாக இருப்போம்’ காற்று தன் மூச்சை இழந்ததுஇதயத்தின் கதவுஒரு முடிவில்லா இருளில் மூடப்பட்டது. ’அப்படியானால்,நான் உன்னைத் தொட மாட்டேன்உன் புன்னகையின் நதியில் நீந்த மாட்டேன்உன் கண்களின் வானத்தில் பறக்க மாட்டேன்’ ஏன் என்றாள் கண்கள் கலங்க ஏனென்றால் நான் இருக்க மாட்டேன் உன் நினைவுகளில் மறையும் நிலவாவேன்

கயிற்றின் மேல் நடைப்பயிற்சி

அவன் என் உயிர்த் தோழன்அழகன்அழகைத் தன் பெயரிலும் கொண்டவன்பப்பில் சந்தித்தோம்மனையாளையும் அழைத்து வந்தான்அவளை முதல்முதலில் பார்க்கிறேன்என் தோழியுடன் நான் கிளம்பும் போதுஅவள் ஆடையைப் புகழ்ந்தேன் மறுநாள் தோழி சொன்னாள்’நீ சொன்னது தவறுநானாக இருந்தால் சங்கடமடைவேன்’என் மனம் சுருங்கியது நண்பனிடம் ஆரம்பத்திலேயேசொல்லியிருந்தேன்’ஒரு அழகனைச் சந்திக்கப் போவதால்தோற்றத்தில் அதிக கவனமெடுத்தேன்அதுதான் கொஞ்சம் தாமதம்’ரசித்தான்பெரிதாகச் சிரித்தான் தோழியின் சொல் கேட்டுஎனக்கோர் சந்தேகம்ஆணின் அழகைப் புகழலாம்,பெண்ணின் ஆடையைக் கூட பாராட்டலாகாதா? நாளை மீண்டும் அந்த ஜோடிதோழியும் இருப்பாள்வாயை எப்படிக் கட்டுவது?இப்போதே யோசனை தொடங்கியது … Read more

சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

நாவலோ சிறுகதையோ எழுதுவது வேறு. ஆனால் கவிதை எழுதுவது இதுவரை இல்லாத வேறு ஏதோ ஓர் அனுபவமாக இருக்கிறது. நான் இருபத்தைந்து வயதிலிருந்து கவிதையில் வாழ்கிறேன். ஸீரோ டிகிரியில் பல கவிதைகள் உண்டு. தேகத்தில் உண்டு. பெட்டியோ நாவலாக இருந்தாலும் அதில் முக்கால்வாசி கவிதைதான். கவிதை என்று தனியாக இருக்காது. ஆனால் கவிதையாக எழுதப்பட்ட நாவல். ஆனால் இப்போதுதான் ஒரு முழுமையான கவிஞனாக வாழ்கிறேன். கவிதையில் வாழ்வது வேறு. கவிஞனாக வாழ்வது வேறு. கவிதையே எழுதாமல் கவிதை … Read more

உயிர்வாதையின் பின்னணி

இன்று ஸ்ரீ ஒரு ஹிந்திப் பாடலை அனுப்பியிருந்தாள். கேள்விப்பட்டிராத பாடல். ராஹத் ஃபத்தே அலிகான் பாடியது. ஹீரோயின் என்ற படம். அர்ஜும் ராம்பால் நடித்தது. அர்ஜுன் ராம்பால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். பாடல் என் ஆன்மாவை உருக்கியது. ராஹத் ஃபத்தே அலி கானின் குரலுக்குக் கேட்க வேண்டுமா? பாடல் ஹீரோயினில் இடம் பெறுவதற்கு முன்னதாகவே இதை எழுதி, இசையமைத்துப் பாடியவர் கைலாஷ் கேர். ஆனால் படத்தில் கைலாஷ் பாடவில்லை. கைலாஷை விட ராஹத் நன்றாகப் பாடியிருக்கிறார். … Read more