கவிதையை நிறுத்தும் எளிய வழி

என்னைப் பற்றியே எழுதுகிறாய்என் வார்த்தைகளைஎன் காலை மௌனத்தைஅந்த மௌனம் உனக்குத் தரும் துயரத்தைஎன் பூனைகளின் விளையாட்டைஎல்லாவற்றையும் கவிதையாக்குகிறாய் எப்போது ஓய்வெடுப்பாய், கவிஞனே?எப்போதுஉன் கணினியில்தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டுஉன் மேசையை விட்டு எழுந்துஉனக்குப் பிடித்தமான காஃபியைக் குடித்தபடிஜன்னல் வழியே மேகங்களைப் பார்ப்பாய்?அல்லதுநீ கவிதையெழுதும் போதெல்லாம்ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துச் செல்லும்உனக்குப் பிரியமான மைனாவுடன்பேசுவாய்? ‘நீயே கவிதைஅதனால்நீ பேசுவதெல்லாம் கவிதையாகிறது’என்கிறாய்பல நூறு முறைபல நூறு கவிகளால்சொல்லப்பட்ட தேய்மொழி ‘சரி, கவிதையை நிறுத்தவொருஎளிய வழியிருக்கிறது அன்பே!பயமுறுத்தும் அளவுக்கு எளிதுகாலையில் என்ன சாப்பிட்டாய்?மதியம் … Read more

இறைவியின் முத்தம்

இறைவி கூறினாள்:நம்மைப் பற்றி எழுதாதேஅந்த வார்த்தைகள் காற்றில் பரவும் இலைகளைப் போலஎன் இதயத்தைத் தொட்டு தடுத்து நிறுத்த முயன்றன.‘உன் நண்பர்கள் உன்னைப் பரிகசிக்கிறார்கள்,அதை நான் விரும்பவில்லை’ என்றாள்.ஆனால் இறைவியேகாதல் நதி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்அதைத் தடுத்தால் வெள்ளமாக மாறும். அதற்குப் பதிலாக,நான் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன்—ஒரு பழங்கதை, நூறு முறை சொல்லப்பட்டது,ஆனால்அதன் ஆழத்தில் மறைந்திருந்தஒரு ரகசியத்தை விட்டுவிட்டேன்.அது இப்போது வெளிவர வேண்டும்,ஏனெனில் காதல் ஒரு விதை;அது மண்ணில் புதைந்தாலும்,மழைக்காகக் காத்திருந்து முளைக்கும்.இந்தக் கதை நம்ப முடியாததுஆனால் … Read more

Requiemஇல் விடுபட்டது

நண்ப,உனக்கு என் தோழிபச்சைக்கண் பேரழகியைத் தெரியும்அவள் என் அருகில் கூட அல்ல,என் மடிமீது அமர்ந்தே பேசுவாள்ஆனால்அவள் என் எழுத்தைப் படித்ததில்லைபடி என்றேன்காலக்கெடுவும் வைத்தேன்அப்போதும் படிக்கவில்லைநீங்கி விட்டேன் அவளைஆதலனினால், புரிந்து கொள்உன்னை என்னருகேஅமர்ந்து கொள் எனஅழைத்ததுஉன்னை என் சிறந்த மாணாக்கனெனநினைத்தனால் மட்டுமேவேறெந்தக் காரணமும் இல்லை

Requiem

1 நண்ப,உனை அழைத்தேன்ஒரு பயணியின் குரலில்நதியின் கரையில் அமர்ந்துஞானத்தின் புதிர்களைப் பகிர்ந்து கொள்ள பிஸி என்றாய்சில தினங்கள் சென்று அழைத்தேன்சற்றே குற்ற உணர்வுடன்நானே அழைக்கிறேனென்றாய்காத்திருந்தேன், காஃபி குடித்தபடிசுவர்களின் விரிசல்களை எண்ணிக்கொண்டுநீ வரவில்லை, மனதில் பதிந்து வைத்தேன் தற்செயலாய் ஒரு மாலையில்நண்பர்களின் சந்திப்பில்உனைக் கண்டேன்அருகில் அமர அழைத்தேன்நெருக்கியடித்து அமர்வது அசௌகர்யமெனதூரத்தில் அமர்ந்தாய்நீ என்னைத் தவிர்க்கவில்லை, தெரியும்ஆனால்,நீ வேறோர் உலகத்தில் இருக்கிறாய் அன்று அலெஹோ கார்ப்பெந்த்தியர்குறித்துப் பேசினேன்அது காற்றில் மிதந்துநிலவின் ஒளியில் கரைந்ததுகேட்காத தொலைவில் நீஇருந்தாய்அதற்கு முன் பேசியதில்லைஇனி பேசப் … Read more

சிற்பியின் வீட்டிலிருந்த சிப்பிப்பாறை: பிரபு காளிதாஸ் எடுத்த என் மிகச் சிறந்த புகைப்படம்

கும்பகோணத்தில் ஒரு சிற்பியின் வீட்டில் இருந்த ஒரு நாய் என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது இதை எடுத்தார் பிரபு காளிதாஸ். போஸ் கொடுக்கவில்லை. இயல்பாக எடுத்தது. சிப்பிப் பாறை. ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் எழுதிக்கொண்டிருந்த சமயம். பிரபு காளிதாஸ்தான் என்னுடைய எல்லா கட்டுரைகளுக்கும் புகைப்படம். அவரது புகைப்படங்களுக்கு ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவின் ஆசிரியர் குழுவே ரசிகர் கூட்டமாக மாறியிருந்தது அப்போது. படத்தைப் பார்த்தால் எனக்குத் தோன்றுகிறது, உலகில் உள்ள எல்லா நாய்களும், பூனைகளும் என் மேல் அன்பு பாராட்டுகின்றன, … Read more

மனதால் நினைந்து…

’நீயெனைப் பிரிந்தால்உனக்கு இன்னொருத்திநீ சொல்வாய்,பிரேதங்கள் மீது நடந்து செல்வதாகஅந்தப் பிரேத வரிசையிலேநான் கிடப்பேன் கடைசியாக,இல்லையா?’ அடியேய்,நின் பெயரைமனதால் நினைந்துவாயால் சொல்லிநின்றேன் இருந்தேன்கிடந்தேன் திரிந்தேன் நாடாத மலர் நாடிநின் வாடாத மலர் அடிக்கீழ்வைத்தேன்கூடவேநினைந்து நைந்து கரைந்துருகிபுனைந்த என்கவிதை ஐநூறும் சாற்றினேன் இதற்கு மேலுமா சந்தேகம்?சரி, இனியொரு ஐநூறுபுனைவேன்அப்போதேனும்நம்புவாயாஎன் நந்தா விளக்கமே? (காலையிலிருந்து நம்மாழ்வாரையும் பெரியாழ்வாரையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதை இது. டி.எஸ். எலியட்டின் இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி டெக்னிக்கைப் பயன்படுத்தினேன். பல சொற்றடர்கள் இரண்டு ஆழ்வார்களிடமிருந்தும் பெற்றது.)