அய்யப்ப மாதவனின் கவிதைகளும் ஒரு மெட்டல் ராக் பாடலும்

Tommy Johansson – ஸ்வீடிஷ் பாடகர். இவருடைய “She’s Gone” என்ற பாடலை கிட்டத்தட்ட ஆயிரம் முறை கேட்டிருப்பேன். தினந்தோறும் நடைப் பயிற்சியின்போது திரும்பத் திரும்பக் கேட்பது இந்த ஒரு பாடலைத்தான். இந்தப் பாடலை டாமி ஜோஹான்சன் 2022இல் வெளியிட்டார். ஆனால் இதன் அசல் வடிவம் ஸ்டீல்ஹார்ட் என்ற குழுவினால் 1990இல் வெளிவந்தது. இந்தக் குழுவில் இந்தப் பாடலை முதலில் பாடியவர் குரோஷியாவைச் சேர்ந்த Miljenko Matijevic. இப்போதும் ஸ்டீல்ஹார்ட் குழுவின் பிரதான பாடகராகத் தொடர்ந்து இயங்கி … Read more

ரோஷ்ணியின் கொடுங்கனா

என் பெயர் ரோஷ்ணி என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.  தலைப்பிலேயே என் பெயர் வந்து விட்டது.  நான் கண்ட கொடுங்கனாவுக்குள் செல்வதற்கு முன்னால் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். என் வயது இருபத்தாறு.  திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.  குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற தீவிரமான முடிவில் இருக்கிறேன்.  அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இது நாவலாகப் போய் விடும்.  அது இப்போது நமக்குத் தேவையில்லை.  எப்போதாவது நான் ஒரு நாவல் எழுதினால் அதற்காக இந்த … Read more

சண்முகம் மாமாவும் குட்லியும்…

அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும் என்ற தலைப்பில் என் கட்டுரைத் தொகுப்பு தயாராகி விட்டது. இன்னும் இரண்டொரு வாரத்தில் விற்பனைக்கு வரும். இப்படியாக வரும் அக்டோபருக்குள் என்னுடைய ஐம்பது நூல்கள் வெளியாகும். இதுவரை ஐந்தோ ஆறோ வந்திருக்கிறது. எல்லாம் ராஸலீலா பதிப்பகம். இத்தனைக்கும் காரணம், ஸ்ரீராம். அவர்தான் எல்லா கட்டுரைகளையும் அதன் உள்ளடக்கத்தை வைத்துத் தொகுத்தார். அது சாதாரணமான வேலை அல்ல. ஏழெட்டு ஆண்டுகளாக இதைச் செய்திருக்கிறார். மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாசகிகள்தான் செய்வார்கள். இங்கே பெண்களுக்கு … Read more

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

இன்று ராஸலீலா பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு ஜோடிப்புறா எத்தனை பிரதிகள் விற்றன என்று கேட்டேன். 33 என்ற பதில் வந்தது. என் வாட்ஸப் தொடர்பில் சுமார் நானூறு பேர் உள்ளனர். அவர்களில் ஒரு நூறு பேர் வாங்கினால் கூட போதும், பதிப்பகத்திலிருந்து என்னுடைய மற்ற நூல்களைப் பிரசுரித்து விடலாம். இப்படி பத்தும் இருபதும் விற்றால் எப்படி எழுதுவது? எதற்காக எழுதுவது? ஒரு யோசனை சொல்கிறேன். எனக்கு சில நண்பர்கள் பணம் அனுப்புகிறார்கள். சில தினங்கள் முன்பு கூட … Read more

நெருப்புத் தேர்

பித்தனைப் போல் நானும் நெருப்புத் தேரில்தான் பயணிக்கிறேன் ஐம்பது ஆண்டுகளாக என் விரல்களிலிருந்து சுடர்விட்ட  எழுத்துக்களைப் பற்றியபடி அதன் சக்கரங்கள் சுழல்கின்றன. மதியத்துக்குள் ஒரு முக்கியக் கட்டுரை அச்சுக்குப் போக வேண்டும் அப்போது தந்தை இறந்த செய்தி வந்தது. நான் போகவில்லை. தம்பியிடம் சடங்குகளை ஒப்படைத்துவிட்டு நான் தொடர்ந்து எழுதினேன். வார்த்தைகள் என்னை எரித்தன நான் அவற்றை எரித்தேன். கட்டுரையை அனுப்பிய பின் எடிட்டர் கேட்டார், “நீ மனிதனா?” நான் சொன்னேன்: “இல்லை. நானொரு  நெருப்புத் தேர்.” … Read more