கோவாவில் ஒரு வீடு

பெங்களூர் சென்றிருந்ததால் நம் தொடரைத் தொடர முடியவில்லை.  இப்படி ஒரு இடைவெளி வரும் என்று தெரிந்ததால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதைப் பதிவேற்றம் செய்யும்போது கட்டுரை கணினித் திரையிலிருந்து காணாமல் போய் விட்டது.  அதைத் திரும்பவும் நாளை உட்கார்ந்து எழுத வேண்டும்.  அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  நான் இனிமேல் மாதத்தில் ஐந்து நாள்கள் கோவாவில் இருப்பேன்.  பெங்களூருக்கு பதிலாக கோவா.  அதன் பொருட்டு கோவாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்.  … Read more

24. போர்னோவும் கலையும் (தொடர்ச்சி)

“எனது படங்களின் நோக்கம், பெண்களின் பாலியலைக் காண்பிப்பது அல்ல; அதை ஆய்வு செய்வதே.”                                                                                     – காத்ரீன் ப்ரேயா காத்ரீனின் இருபத்தைந்து ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் (2004இல் எழுதப்பட்ட கட்டுரை இது) அவரது ஆறாவது படம் ரொமான்ஸ்.  ரொமான்ஸை மிகச் சுருக்கமாக ‘ஒரு பெண் பாலியலை சுயவதையின் (masochistic) மூலமாக அணுகுவது’ என்று சொல்லலாம். இப்படத்தின் முன்னோடியாக Nagisa Oshimaவின்  In the Realm of Senses (1976) திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார் காத்ரீன்.  … Read more

23. போர்னோவும் கலையும்: காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்களை முன்வைத்து…

(ஒரு முன்குறிப்பு:  இந்தக் குறிப்பிட்ட கட்டுரை 2005இல் எழுதப்பட்டு, உயிர்மையில் வெளிவந்த்து.  பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு கட்டுரை தமிழில் வந்திருக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். பின்னர் இந்தக் கட்டுரை ”சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்” என்ற என் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.  இந்தக் கட்டுரையை நான் கேட்டவுடன் எடுத்துக்கொடுத்த ஸ்ரீராமுக்கு இப்போது இதை நான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.  நாம் இப்போது விவாதித்து வரும் விஷயங்களுக்கு மிகவும் தேவையான கட்டுரை என்பதால் … Read more

22. என்னை உருவாக்கிய திரைப்படம் (1)

முழுக் கட்டுரையையும் இன்று முடிக்க முடியாது என்று தோன்றுவதால் பகுதி ஒன்று என்று கொடுத்திருக்கிறேன்.  இன்றும் வீடு தேடி அலைய வேண்டியிருக்கிறது.  பார்ப்போம்.  ***  உலக இலக்கியத்தில் ட்ரான்ஸ்கிரஸிவாக எழுதியவர்கள் யாரும் தனியாக, ஒற்றை ஆளாக இல்லை.  உதாரணமாக, கேத்தி ஆக்கர் என்ற பெயரைத் தட்டினால் அதன் கூடவே வில்லியம் பர்ரோஸ் பெயர் வரும்.  வில்லியம் பர்ரோஸ் யார் யார் மூலம் அந்த இடத்துக்கு வந்தடைந்தார், அவர் எழுத்தில் யார் யாருடைய பாதிப்பு இருக்கிறது என்ற பட்டியலைப் … Read more

ஏன் தினமும் எழுதுகிறீர்கள்?

என் நண்பர் ஒருவர் என் வாட்ஸப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். எழுதிய நேரம் இரவு 11.43. ”உங்களை நிரூபிக்க என்ன தேவை இருக்கிறது சாரு… ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஒரு ரெண்டு நாள் எழுதுங்கள், போஸ்ட் பண்ணாதீர்கள். வீட்டில் நீங்க பாட்டுக்கு இருங்கள். எழுதி எழுதி போஸ்ட் போடனும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு பத்து நாள் அமைதியாக இருங்கள் .. எல்லாரும் தேடி வருவார்கள், இல்லயா ஒரு **## இல்லை.. சாரு தப்பாகச் சொல்லிருந்தால் மன்னிச்சிருங்க.. … Read more

21. பின்னோக்கிப் பார்க்கிறேன்…

1978இலிருந்து நான் தில்லியில் பார்த்த திரைப்படங்கள்தான் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பெரும்பான்மையான படைப்பாளிகளை நான் மூர்க்கமாக நிராகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன. நான் நிராகரித்தவர்களுள் முக்கியமானவர் தி.ஜானகிராமன். அந்தத் திரைப்படங்கள் எனக்குப் பார்க்கக் கிடைத்ததனாலேயே ”நான் ஜெர்மன் சினிமாவினால் உருவாக்கப்பட்டேன்” என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். பொதுவாகச் சொன்னால், ஐரோப்பிய சினிமா. அதிலும் பெர்க்மன் போன்றவர்கள் அல்ல. பெர்க்மன் மானுட குலத்தின் ஆன்மீக வெறுமையைத் தன் கருப்பொருளாக எடுத்தவர். ஆனால் பசோலினி போன்றவர்களும், ஜெர்மானிய பெண் இயக்குனர்களும்தான் மனிதனின் … Read more