திசை அறியும் பறவைகள்

இந்தக் குறிப்பில் உள்ள இணைப்புகளைக் காண முடியாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.  புரியாது. இந்த உலகின் அதியற்புத நடனங்களில் ஒன்று, த்தாங்கோ (Tango).  த்தாங்கோவைப் பார்க்கும் போது இதற்கு இணையான நடனமே இல்லை என்று தோன்றும்.  த்தாங்கோ, ஸால்ஸா இரண்டைப் பற்றியுமே 20 ஆண்டுகளுக்கு முந்தைய என் கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  எக்ஸைல் நாவலிலும் அது உண்டு.  த்தாங்கோ அர்ஹெந்த்தினாவில் மிகப் பிரசித்தம்.  புவனோஸ் அய்ரஸின் தெருக்களிலேயே த்தாங்கோவை ஆடிக் கொண்டிருப்பார்கள்.  கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள். … Read more

புனைவும் வாழ்வும்

நன்றி: புதிய தலைமுறை, 14 ஜூன் 2018 தங்களின் சுயசரிதையைத்தான் ஸீரோ டிகிரி முதல் எக்ஸைல் வரை எழுதியிருக்கிறீர்கள். கோணல் பக்கங்கள் மாதிரியான கட்டுரைப் புத்தகங்களிலும் அப்பட்டமாக உதிரி உதிரியாக உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். காந்தியின் சத்திய சோதனை மாதிரி உங்கள் சுயசரிதையை நேரடியாகவே எழுதினால் என்ன? யாழினி பார்வதம், சென்னை ஓர் எழுத்தாளர் தன் வாழ்வையம் புனைவையும் கலந்ததான் எழுத முடியும். இதை நான் மட்டுமே முதல் முதலாகச் செய்யவில்லை. நமது முன்னோடிகளான க.நா.சு., சி.சு. செல்லப்பா, … Read more

இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல்

நன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது.  அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது.  இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும்.  சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது.  … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு

https://tinyurl.com/pazhuppu3 பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு இரண்டாம் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம், இரண்டாம் பாகத்துக்கு நான் ஒவ்வொரு நண்பராக போன் செய்து ஞாபகப்படுத்தினேன். இப்போது அப்படிச் செய்யவில்லை. நான் போன் பண்ணாவிட்டாலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களான 500 பேர் வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையே காரணம். உண்மையில், மூன்றாம் பாகம் இரண்டாம் பாகத்தை விட முக்கியமானது. சி.சு. செல்லப்பா, கு.ப.ரா. ஆகிய இருவரும் இதில்தான் இருக்கிறார்கள். மேலும், ப. சிங்காரம். அவருடைய … Read more

ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில்…

ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமாக காரியங்களுக்கு எதிர்வினைகள் மட்டும் நியாயமான, தர்மமான முறையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம், மடத்தனம் மட்டுமல்ல; அதர்மமும் கூட. எனவே 17 பேருக்கு எதிராக முடிவு செய்திருக்கும் வக்கீல்களின் முடிவு சரியானதுதான். இதை நாம் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் கோணத்திலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும். அது எத்தனை முறையற்றதாக இருந்தாலும். 17 பேருக்கும் அவர்கள் சாகும் தினம் வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பரோல் … Read more

மன்னியுங்கள் நண்பர்களே…

ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் தொடர்ந்து இந்தியா பற்றிக் கடுமையாக விமர்சித்தே எழுதுகிறீர்கள்.  இந்த முறையாவது அப்படி எழுத வேண்டாம் என்று சில நண்பர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.  எனக்கும் அவர்கள் சொன்னதில் நியாயம் தெரிந்தது.  ஆனால் தொடர்ந்து தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது என்னால் இந்தியாவில் உள்ள நல்ல விஷயங்கள் பற்றி எழுத முடியாது என்றே தோன்றுகிறது.  இந்தியா என்றால் என்ன?  அதன் மக்கள்தானே?  அதன் மக்கள் தொகையில் கணிசமான பேர் ரேப்பிஸ்டுகளாக இருக்கும் போது … Read more