தமிழ் எழுத்தாளன்

இப்போது என்னால் ஒரு அமெரிக்க, ப்ரிட்டிஷ் எழுத்தாளரைப் போலவே வெகு சரளமாக ஆங்கிலத்தில் நாவலோ சிறுகதையோ எழுத முடியும். சில பிழைகள் இருக்கும். அதை ஒரு எடிட்டரால் சரி செய்து விட முடியும். இதற்கு நான் செயற்கை நுண்ணறிவை நாடுவதில்லை. அந்த எந்திர மொழிபெயர்ப்பினால் இலக்கிய உலகில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் நாலு வாக்கியத்தை எழுதி அதை செயற்கை நுண்ணறிவால் மொழிபெயர்த்து பதிப்பகத்திடம் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் அது செயற்கை நுண்ணறிவு என்று கண்டு பிடித்து … Read more

அய்யப்ப மாதவனின் கவிதைகளும் ஒரு மெட்டல் ராக் பாடலும் (2)

பாடலை உங்களுக்குக் கொடுக்க மறந்து விட்டேன். இரண்டு வித பாடல்கள் உள்ளன. எனக்குப் பிடித்த பாடல் இது: Verse 2 She’s gone Out of my life Oh, she’s gone I find it so hard to go on I really miss that girl, my love Come back into my arms I’m so alone I’m begging you Chorus Lady, won’t you save … Read more

அய்யப்ப மாதவனின் கவிதைகளும் ஒரு மெட்டல் ராக் பாடலும்

Tommy Johansson – ஸ்வீடிஷ் பாடகர். இவருடைய “She’s Gone” என்ற பாடலை கிட்டத்தட்ட ஆயிரம் முறை கேட்டிருப்பேன். தினந்தோறும் நடைப் பயிற்சியின்போது திரும்பத் திரும்பக் கேட்பது இந்த ஒரு பாடலைத்தான். இந்தப் பாடலை டாமி ஜோஹான்சன் 2022இல் வெளியிட்டார். ஆனால் இதன் அசல் வடிவம் ஸ்டீல்ஹார்ட் என்ற குழுவினால் 1990இல் வெளிவந்தது. இந்தக் குழுவில் இந்தப் பாடலை முதலில் பாடியவர் குரோஷியாவைச் சேர்ந்த Miljenko Matijevic. இப்போதும் ஸ்டீல்ஹார்ட் குழுவின் பிரதான பாடகராகத் தொடர்ந்து இயங்கி … Read more

ரோஷ்ணியின் கொடுங்கனா

என் பெயர் ரோஷ்ணி என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.  தலைப்பிலேயே என் பெயர் வந்து விட்டது.  நான் கண்ட கொடுங்கனாவுக்குள் செல்வதற்கு முன்னால் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். என் வயது இருபத்தாறு.  திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.  குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற தீவிரமான முடிவில் இருக்கிறேன்.  அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இது நாவலாகப் போய் விடும்.  அது இப்போது நமக்குத் தேவையில்லை.  எப்போதாவது நான் ஒரு நாவல் எழுதினால் அதற்காக இந்த … Read more

சண்முகம் மாமாவும் குட்லியும்…

அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும் என்ற தலைப்பில் என் கட்டுரைத் தொகுப்பு தயாராகி விட்டது. இன்னும் இரண்டொரு வாரத்தில் விற்பனைக்கு வரும். இப்படியாக வரும் அக்டோபருக்குள் என்னுடைய ஐம்பது நூல்கள் வெளியாகும். இதுவரை ஐந்தோ ஆறோ வந்திருக்கிறது. எல்லாம் ராஸலீலா பதிப்பகம். இத்தனைக்கும் காரணம், ஸ்ரீராம். அவர்தான் எல்லா கட்டுரைகளையும் அதன் உள்ளடக்கத்தை வைத்துத் தொகுத்தார். அது சாதாரணமான வேலை அல்ல. ஏழெட்டு ஆண்டுகளாக இதைச் செய்திருக்கிறார். மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாசகிகள்தான் செய்வார்கள். இங்கே பெண்களுக்கு … Read more