புத்தக விழா குறிப்புகள் – 3
இன்று ஃபேஸ்புக்கைத் திறந்தால்தான் தெரிகிறது, நேற்று எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் நடந்திருக்கிறது என்று. ராம்ஜி எனக்காக சுஸ்வாதிலிருந்து முறுக்கு, மைசூர் பாகு, மாலாடு என்ற தெய்வீகப் பண்டங்களை வாங்கி, புத்தக விழாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்த விஷயமே இன்று ஃபேஸ்புக்கில் காயத்ரியின் பதிவைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. நான் கொஞ்சம் தாமதாகப் போனேன். அங்கே கைமுறுக்கு இருந்தது. மைசூர் பாகு, மாலாடு விஷயங்கள் அடியேன் அறியேன். முறுக்கு மட்டும் சாப்பிட்டேன். மற்ற ரெண்டும் முன்பே முடிந்து விட்டிருக்கிறது போல. … Read more