இன்று காலை நடந்த ஒரு உரையாடல்:
நண்பர்: சாரு, உங்களைச் சந்திக்க நேரில் வருகிறேன். பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.
நான்: அவசியம் வாருங்கள். சந்திப்போம்.
நண்பர்: வரும்போது ஒரு கூடை மல்லிகை வாங்கி வருகிறேன். உங்களுக்கு பூக்கள் – அதிலும் மல்லிகைப்பூ ரொம்ப இஷ்டமாயிற்றே?
நான்: ஒரு கூடை மல்லிகைப் பூ என்ன விலை?
நண்பர்: 1000 ரூபாயிலிருந்து 6000 ரூ. வரை போகும். இன்றைய விலை 4000 ரூ.
நான்: அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நீங்கள் இரண்டு ஆண்டுகளாக நம் ப்ளாகுக்கு சந்தாவோ நன்கொடையோ அனுப்புவதில்லை. இலவசமாகத்தான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் அந்த நாலாயிரம் ரூபாயை என்னை நேரில் பார்க்கும்போது கொடுத்து விடுங்கள். எனக்கு பூனை உணவுக்கு ஆகும். சரிங்களா?
நண்பர்: சாரு… பிஸினஸ்ல ரொம்பப் பிரச்சினையாயிப் போயிடுச்சுங்க… மூணு கோடி திடீர்னு லாஸு. எதிர்பார்க்கவே
நான் (குறுக்கிட்டு): சரிங்க, நேர்ல வாங்க… ரெண்டு கோடி லாஸ் பத்திப் பேசுவோம். இப்போ அவந்திகா கூப்பிட்றா…