மிரட்டல்

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்தது. அது போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் போலீஸிடமிருந்து ஃபோன் வந்தது. இந்த விஷயத்தில் எனக்கு தமிழக அரசின் மீதும், அதிகாரிகள் மீதும், குறிப்பாக தமிழக போலீஸ் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. எனக்கு இந்த சினிமா நடிகனின் ரசிகக் குஞ்சாமணிகளின் மிரட்டல் பற்றி எந்தக் கவலையும் பயமும் இல்லை. காந்தி நகரில்தான் தினமும் தனியாக, போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல், வாக்கிங் போய்க்கொண்டிருக்கிறேன். ஏழரை மணிக்கு சரியாக காந்தி நகர் சங்கீதா உணவகத்தில் காஃபி குடிப்பேன். என்னை நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதைச் செய்யலாம்.

என் புகைப்படங்கள் பல இணையத்தில் உள்ளன.

போலீஸ்துறையின் வெடிகுண்டு சோதனைப் படை இப்போது வீட்டுக்கு வந்து வீட்டை அலசப் போவதாக அந்தக் குறிப்பிட்ட துறையிலிருந்து தகவல் வந்தது. வெடிகுண்டு சோதனைப் படைக்காகக் காத்திருக்கிறேன்.