நெருப்புத் தேர் – கடலூர் சீனுவின் கடிதம்

Dear charu பெரும்பாலும் காலைகளை ஏதேனும் கவிதையோடுதான் துவங்குவேன். இன்றைய காலை உங்களின் நெருப்புத் தேர் கவிதையோடு துவங்கியது. கடலூர் பாடலீஸ்வரர் கோயில் சைவ பண்பாட்டில் முக்கியமானதொரு கோயில். நாவுக்கரசர் உழவாரப்பணி செய்த களம். அந்தக் கோயிலில் நூறு வருடம் முன்னர் பிரும்மாண்டமான தேர் ஒன்று இருந்ததாகவும், ஒரு தேரோட்ட விழாவின்போது சித்தன் ஒருவன் அதை எரித்து விட்டதாகவும், பக்தர்கள் அந்த சித்தனை தூக்கி அதே எரியும் தேர் தீயில் வீசி கொன்று விட்டதாகவும், அதன் பிறகு … Read more

நெருப்புத் தேர்

பித்தனைப் போல் நானும் நெருப்புத் தேரில்தான் பயணிக்கிறேன் ஐம்பது ஆண்டுகளாக என் விரல்களிலிருந்து சுடர்விட்ட  எழுத்துக்களைப் பற்றியபடி அதன் சக்கரங்கள் சுழல்கின்றன. மதியத்துக்குள் ஒரு முக்கியக் கட்டுரை அச்சுக்குப் போக வேண்டும் அப்போது தந்தை இறந்த செய்தி வந்தது. நான் போகவில்லை. தம்பியிடம் சடங்குகளை ஒப்படைத்துவிட்டு நான் தொடர்ந்து எழுதினேன். வார்த்தைகள் என்னை எரித்தன நான் அவற்றை எரித்தேன். கட்டுரையை அனுப்பிய பின் எடிட்டர் கேட்டார், “நீ மனிதனா?” நான் சொன்னேன்: “இல்லை. நானொரு  நெருப்புத் தேர்.” … Read more