வயது (குறுங்கதை)
கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது. நீண்ட கால நண்பர். சந்தித்து சில ஆண்டுகள் இருக்கும். பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம். எனக்குப் பிரியமான எழுத்தாளரும் கூட. அவரோடு இருந்தால் எப்போதும் சிரிப்பும் அமளியுமாகவே இருக்கும். குசலம் விசாரித்த பிறகு உரையாடலை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. நண்பர் என்னைப் போலவே ஒரு குடிவிரும்பி. குடி பற்றிய அல்லது எது பற்றியுமே சங்கோஜமோ, கூச்ச உணர்வோ, குற்ற மனப்பான்மையும் இல்லாத அளவுக்கு வெளிப்படையானவர். … Read more