யார் ஹெடோனிஸ்ட்? (2)

ராஜ சுந்தரராஜன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே வருவது: வெளிவிளக்கம்_______________ அனுபவித்தலும் அனுபவித்ததாகப் பாவித்தலும் ஒன்றுதான். எனது “இரண்டாம் விதி” (August 6, 2019) பதிவில் இது உணர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றை இழித்து மற்றொன்றை உயர்த்த வேண்டியதில்லை. அனுபவித்தல் புறவயமானது. பாவித்தல் அகவயமானது. சங்கத்தமிழ்க் கவிதைகளை ஆழ்ந்தறிந்த எவர்க்கும் ஆண்பாற் கவிஞர்கள் தலைவி/ தோழி/ செவிலி கூற்றுக் கவிதைகளை பாவித்தே எழுதியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும். ஒரு சுமைதூக்கி, ஓள் ஓட்பவன்/ள், மந்த்ரங்கள் ஓதுபவன்/ள் எவனும்/ளும் புறவயமானவரே. ஒரு … Read more

the sculptors of classical tamil…

நிகழ்ச்சியை நடத்தும் அஜயன் பாலாவும் தன்னை சிரமப்படுத்திக் கொண்டு கலைப்பணி செய்பவர்தான்.  நிகழ்ச்சியில் எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார்கள்.  அந்தப் பொன்னாடையின் விலை எவ்வளவு இருக்கும் என்று தெரியாது.  500 ரூபாய் இருக்குமா அல்லது ஆயிரமா, எப்படி இருந்தாலும் அந்தப் பணத்தை என் கையில் கொடுத்திருந்தால் பூனையின் உணவுக்கு ஒரு நாலு நாள் வந்திருக்கும்.  அதோடு விட்டிருந்தால் இந்தப் பதிவை எழுதியே இருக்க மாட்டேன்.  கையில் அன்புப் பரிசாக அஜயன் பாலா தொகுத்த ஒரு பெரிய நூலைக் … Read more

இரந்து வாழ்தல்…

கூட்டங்களில் பேச அழைக்கிறார்கள்.   நட்பின் காரணமாக நானும் செல்கிறேன்.  பணம் எதுவும் கொடுப்பதில்லை.  நானும் கேட்பதில்லை.  தெரியாதவர்களாக இருந்தால் கேட்கிறேன்.  கொடுப்பதில்லை.  ஆனால் பணம் கேட்டவுடனேயே அழைப்பதை ரத்து செய்து விடுகிறார்கள்.    ஓசியில்தான் வர வேண்டும்.  வர முடியுமா?  இல்லைங்க, முடியாது.  அப்டீங்ளா, சரி.  கதை முடிந்தது.  அது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஆனால் நட்புக்காகப் போவதில் சில சிக்கல்கள்.  கார் அனுப்புவார்கள்.  கொண்டு வந்து விடுவார்கள்.  அத்தோடு சரி.  ஆனாலும் தொடர்ந்து அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் … Read more

தமிழ் சினிமா

அடுத்த இதழ் ArtReview Asia இதழில் தமிழ் சினிமாவின் நடிப்புச் சிகரங்கள் சிலரைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். தமிழில் எழுதியதாலேயே உலக அளவில் தெரியாமல் போய் விட்ட பாரதி, க.நா.சு., சி.சு.செ., எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தி.ஜ.ர., ஆதவன், கோபி கிருஷ்ணன், கு.ப.ரா. போல தமிழ் சினிமா என்ற வியாபார சினிமாவில் புழங்கியதாலேயே உலகில் தெரியாமல் போய் விட்ட டி.எஸ். பாலையா, சந்திர பாபு, எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் பற்றி யாருக்குமே தெரியாமல் போய் … Read more

யார் ஹெடோனிஸ்ட்?

சாம்நாதன் பற்றி ராஸ லீலா கலெக்டிபிளில் எழுதியிருந்த பின்வரும் குறிப்பை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பை சாம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறான்.  உடனே சாமின் முகநூல் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார்.  முதலில் என் குறிப்பு; அதைத் தொடர்வது சாமின் முகநூல் நண்பரின் எதிர்வினை.  ”சாம்நாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, … Read more

சாம்நாதன் பற்றிய ராஸ லீலா கலெக்டிபிள் குறிப்பு கீழே:

சாம்நாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன என்று ஒருமுறை என்னைக் கேட்டாள் காயத்ரி. உண்மைதான். இந்தப் பத்து ஆண்டுப் பழக்கத்தில் ஓரிரு முறைதான் ஃபோனில் பேசியிருப்பேன். வாசகர் வட்ட சந்திப்புகளில் பல மணி நேரம் பேசியதுண்டு. பல மணி நேரம் என்றால் ஒரு இரவு முழுக்க என்று பொருள். அப்படி இரண்டுமூன்று இரவுகள் போகும். இமயமலைக்குப் … Read more