இரண்டு நேர்காணல்கள்
https://themchblog.wordpress.com/2018/11/01/interview-with-charu-nivedita/ https://themanipaljournal.com/2019/01/09/writers-of-the-new-era-in-conversation-with-charu-nivedita/
https://themchblog.wordpress.com/2018/11/01/interview-with-charu-nivedita/ https://themanipaljournal.com/2019/01/09/writers-of-the-new-era-in-conversation-with-charu-nivedita/
சீலே, பெரூ பயணக் கட்டுரைக்காக Frontera verde (Green Frontier) என்ற கொலம்பியன் வெப்சீரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது த்ரில்லர் வகை சீரீஸ் அல்ல; ஒரு பொழுதுபோக்கு சீரீஸ் அல்ல என்றாலும் த்ரில்லர் genreஇல் எடுக்கப்பட்ட படு சீரியஸான சீரீஸ். நோட்ஸ் எடுத்துக் கொண்டேதான் பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பார்த்த எபிசோடையே திரும்பப் பார்க்க வேண்டியிருக்கிறது. டாக்யுமெண்ட்ரியாக நான் பார்த்த பல விஷயங்களை இதில் புனைவாகப் பார்க்கும் போது அது தரும் அனுபவமே வேறாக இருக்கிறது. … Read more
சமூகம் தன்னுடைய மூடத்தனத்தையும் மௌடீக வாழ்வையும் நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுத்தாளர்களைச் சாடுகிறது. ரேப்பிஸ்ட்டைக் கேட்டால் அவனும் தன்னுடைய நியாயத்தை சொல்லத்தான் செய்வான். சிறைக் கைதிகளையே எடுத்துக் கொள்வோமே, எந்தக் கைதியைக் கேட்டாலும் அவன் தன்னை நிரபராதி என்றுதான் சொல்வான். ”நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.” இதுதான் சிறைக் கைதிகளின் பொதுவாசகம். ஒரு கொலை நடந்திருக்கும். நாலு பேர் மேல் குற்றம் விழும். நாலு பேருமே நான் செய்யவில்லை என்பான். வேறு யார் தான் செய்தார்? யாருமே செய்யவில்லை. … Read more
ஆறு மாதங்களுக்கு முன்னால் எஜமானை வேண்டிக் கொண்டேன். எந்தக் காரியத்துக்காகவும் கடவுளையோ குருநாதரையோ வேண்டுவதில்லை. அப்பனுக்கும் குருவுக்கும் தெரியாதா பிள்ளையின் தேவை என்று நினைப்பு. ஆனால் உயிருக்குயிரானவர்களின் மரணம் தாங்க முடிவதில்லை. அப்படி ஒரு தருணத்தில் எஜமானை வேண்டிக் கொண்டேன். உயிர் திரும்ப வந்தது. எப்போது போவது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை. அதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். எழுத்து விஷயத்தில் வாக்குக் கொடுக்காமலே காப்பாற்றுவேன். பணம் விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் … Read more
கூர்க் சென்றிருந்த போது அங்கே இருந்த மக்கள் தூரத்தில் தெரிந்த மலைகள் பலவற்றைக் காண்பித்து எல்லாம் உங்கள் சிதம்பரத்தினுடையது என்றார்கள். எல்லாம் காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம். நூற்றுக் கணக்கான ஏக்கர் இருக்கும். பெரிய ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். தில்லியிலும் ராஜாவாகவே ஆண்டவர். ஜனநாயக நாடு என்பதால் அமைச்சர் என்கிறோம். நிதி அமைச்சராக, இன்னும் என்னென்னவோ முக்கிய முக்கிய அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தவர். இப்போது ஊழல் வழக்கில் லோக்கல் கேடியைப் போல் தலைமறைவாக இருக்கிறார். இப்போது … Read more
அய்யனாரின் கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது அவரோடு ஒரு நேர்காணல் செய்யலாம் என்று தோன்றியது. முதல் இரண்டு கேள்விகளை இங்கே தருகிறேன். அவர் பதிலை இங்கே முகநூலில் கொடுக்காமல் புத்தகத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் சஸ்பென்ஸ் இருக்கும். இனி கேள்விகள்: கேள்வி: உங்கள் முன்னுரையில் இந்தத் தொகுதிக்கும் முன்பாக மூன்று தொகுதிகள் வந்திருப்பதை அறிந்தேன். இதுவரை தெரிந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். இங்கே யாரும் கவிதை பற்றிப் பேசுவதில்லை. சூழல் அப்படி இருக்கிறது. நானும் … Read more