மீண்டும் ஒரு கடிதம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று போட்டு அதற்கு அடுத்து என் பெயரைப் போட்டு நேற்று ஒரு கடிதம் வந்தது. கீழே தர்மா என்று பெயர் கண்டு, நம்ம தர்மா தானே என்று கேட்டு எழுதினேன். அதற்கு வந்த பதிலை கீழே தருகிறேன். எதற்கு என்றால், முன்பெல்லாம் என் எழுத்தை யாரும் படிப்பதில்லை என்று அழுகுணியாகவே எழுதிக் கொண்டிருப்பேன் அல்லவா? இப்போது நிலைமை மாறி விட்டதாகத் தெரிகிறது. இது போன்ற கடிதங்கள் தினம் ஒன்று வருகிறது. … Read more

ஒரு கடிதம்

அன்புள்ள சாரு அவர்களுக்கு ,  உங்களை என் இலக்கியத் தந்தையாக ,ஒரு ஆசானாகப் பார்க்கிறேன். சென்ற ஆண்டுதான் உங்கள் புத்தங்கள் என் கைகளைத் தொட்டது. ஒரு வருடமாக உங்கள் புத்தகங்கள் அதிக அளவில் படித்து முடித்தேன் ,ஒரு மின்னஞ்சலும் உங்களுக்கு அனுப்பினேன். நீங்கள் உங்கள் தொலைப்பேசி எண் கொடுத்து அழைக்க அனுமதி கொடுத்தீர்கள். என் மனதில் அளவுகடந்த சந்தோசம் அன்று. என் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அது.   இன்றும் அந்நிகழ்வை என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்வேன் . என் உலகத்தை  … Read more

புத்தக விழா

நேற்று திரைப்படழாவின் போது ஒரு நண்பர் கேட்டார், என்ன புத்தகத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா என்று. அவருக்கு சுருக்கமான சொன்ன பதிலை இங்கு சற்றே விரிவாக எழுதுகிறேன். ஆனால் இந்த விஷயத்தை சுமாராக 1008 தடவை எழுதி சலித்து விட்டேன். உங்களுக்கும் படித்துச் சலித்திருக்கும். ஆனாலும் எத்தனை முறை நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டாலும் அத்தனை முறை இதற்கு நான் பதில் சொல்லியே ஆவேன். அதுதான் என் மனோதர்மம். இந்தத் தமிழ் சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன இடம் … Read more

இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…

நான்கைந்து நாட்களாக நாகேஸ்வர ராவ் பூங்காவில் தனியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.  ராகவன் வெளியூர் போய் விட்டார்.  அப்படித்தான் சொல்லுவார்.  எந்த ஊர் என்று சொல்ல மாட்டார்.  நானும் கேட்க மாட்டேன்.  ஆனால் மனசுக்குள் நினைத்துக் கொள்வேன், இதெல்லாம் மகா பெரிய ராணுவ ரகசியம் போல என்று.  ஆனால் இன்னொரு நண்பர் இதை விட பயங்கரம்.  சாய்ந்தரம் சந்திப்போமா என்று போன வாரம் கேட்டேன்.  நான் ஊர்ல இல்லியே சாரு என்றார்.  ஆஹா ஆஹா என்று மனசு குதியாட்டம் … Read more

அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை

முள்ளம்பன்றிகளின் விடுதிஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு அடியேனின் முன்னுரை ’சிறுகதையில்தான் எல்லாவற்றையும் எழுதி முடித்தாயிற்றே, இனிமேல் என்ன இருக்கிறது?’ என்பதுதான் என் பொதுவான நினைப்பாக இருந்தது. ’சிறுகதை செத்துப் போய் விட்டது’ என்றெல்லாம் கூட நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்தக் கருத்து ஹாருகி முராகாமியின் Man-Eating Cats, The Strange Library போன்ற சிறுகதைகளைப் படித்த போது மாறியது. சிறுகதை குறித்த என் எண்ணத்தையே மாற்றிய அம்மாதிரியான கதைகளையே அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள இந்த முள்ளம்பன்றிகளின் விடுதி … Read more

முள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்

அய்யனார் விஸ்வநாத்தின் முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் காட்சிப் பிழை என்று ஒரு சிறுகதை உள்ளது. சில வெப்சீரீஸைப் பார்க்கும் போது அதன் த்ரில் தாங்க முடியாமல் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். கொஞ்ச நேரம் பார்ப்பதை நிறுத்தி விட்டுத் தொடர்வேன். சிலதைப் பார்க்கவே முடியாது. கடைசியில் பார்த்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். நெஞ்சு வலி வராது. வாசிக்கும் போது அநேகமாக இப்படி நடப்பதில்லை. காட்சி ரூபக் … Read more