அன்ஃபூ

என்னை ரவி என்று அழைக்கக் கூடிய நண்பர்கள் கவிஞர் சுகுமாரனும் கவிஞர் கலாப்ரியாவும் ஆவர். அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் இருவரும். அதிலும் கலாப்ரியா என் குடும்ப நண்பரைப் போல. அவரது வேனல் நாவல் சரியானபடி பேசப்படாதது பற்றி என் ஆதங்கத்தை எழுதியிருந்தேன். அதற்கு கலாப்ரியா தன் முகநூலில் பின்வரும் பதிலை எழுதியிருந்தார். அதை நான் புரிந்து கொள்கிறேன். கலாப்ரியாவின் இந்தப் பதிவுக்கு தமிழ் இலக்கிய உலக தாதாவான வண்ணதாசனும் அவரது அடிப்பொடிகளும் பின்னூட்டம் என்ற பெயரில் என்னைத் … Read more

ஊரின் மிக அழகான பெண் (தொடர்ச்சி)

பத்தோரி சீமாட்டி இளம் பெண்களின் ரத்தத்தில் குளிப்பாள் என்றேன்.  வெறும் இளம் பெண்கள் அல்ல; அவர்கள் கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும்.  ஒரு கட்டத்தில் பத்தோரிக்கு இந்த ரத்தச் சடங்குகளெல்லாம் வீண் என்று தோன்றியது.  காரணம், அவளுக்கு ஐம்பது வயது ஆன போது தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன.  சரி, சூன்யக்காரியை வதை செய்து கொன்று விடலாம் என்று முடிவு செய்தாள்.  ஆனால் சூன்யக்காரி பத்தோரி சீமாட்டியிடமிருந்து தப்பிக்கவும், சீமாட்டியையே சிக்கலில் மாட்டி வைக்கவும் ஒரு சதி … Read more

ஊரின் மிக அழகான பெண்

ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மிக மிக முக்கியமான மொழிபெயர்ப்புத் தொகுப்பை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  இந்த நூலை சென்னை புத்தக விழாவிலேயே கொண்டு வந்து விட வேண்டும் என்று விரும்பினேன்.  ஆனாலும் நான் ஒரு perfectionist என்பதால் அவசர கோலமாகக் கொண்டு வருவதில் இஷ்டமில்லை.  பிழை திருத்தம் முடியும் வரை நீண்ட பதிவுகள் எதுவும் எழுதக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தேன்.  ஆனாலும் இன்று நேர்ந்த ஒரு சம்பவத்தால் பிழை திருத்தத்தை … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்

பின்வரும் அறிவிப்பைப் போட்டு நாலைந்து நாள் ஆயிற்று. மூன்று பேர் பதில் எழுதியிருக்கிறார்கள். காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா வாசலில் நின்று கொண்டு டெக்கான் க்ரானிக்கிளும், ஹிண்டுவும் இலவச பிரதி கொடுத்தால் தயங்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற முக்கியமான தொகுதியை அனுப்புகிறேன்; அதை உங்கள் ஊர் நூலகத்தில் வையுங்கள் என்றால் மூணே பேர் பதில். என்ன நாடு ஐயா இது!!! *** ஒரு நண்பர் பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி மூன்றும் ஐம்பது … Read more

ஏ.ஆர். ரஹ்மான் விரும்பிக் கேட்ட என் பேச்சு

”இதனால்தான் நான் இந்து மதத்தை விரும்புகிறேன்” என்ற misleading-ஆன தலைப்பு இருந்ததால்தான் இந்த என்னுடைய பேச்சை இதுநாள் வரை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பேச்சில் நான் வழக்கம்போல் சூஃபிகளைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பேசினேன். கூடவே இந்து மதத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் பற்றியும் பேசினேன். அதை எடுத்துத் தலைப்பாகப் போட்டு விட்டதால் சற்று குழப்பம். இந்த என்னுடைய பேச்சை சுமார் இரண்டரை லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள். இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுத்தான் ஏ.ஆர். … Read more