பூச்சி 20

இந்த அரசியல்வாதிகளின் லூட்டி இந்தக் கொரோனா காலகட்டத்திலும் அடங்க மாட்டேன் என்கிறது.  ஒரு அரசியல்வாதி பர்த்டே கொண்டாடுகிறார்.  கூட்டம் அள்ளுகிறது.  ஆளுக்கு ஆள் அரசியல்வாதிக்குக் கேக் ஊட்டுகிறார்கள்.  ஆமாம், கலி முற்றி உலகம் அழியப் போகிறதா என்ன?  இந்த அளவுக்கு ஆட்டம் போடும் ஒரு அரசியல்வாதியைக் கூட கொரோனா தூக்கவில்லை.  ஆனால் அப்பாவி மருத்துவர்களையும் ஏழைபாழைகளையும் தாக்குகிறதே?  ஒரு லாஜிக்கும் இல்லையே?  இன்னொரு புரியாத விஷயம்.  நீங்கள்தான் எனக்குச் சொல்ல வேண்டும்.  அது ஏன், அமெரிக்கா, ஐரோப்பா, … Read more

பூச்சி 19

”நான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கடைசி வரியில், மேசைக்குக் கீழ் தலையை விட்டு ஒளிந்துகொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் என்பதால் இதைச் சிறப்பாக relate பண்ண முடிகிறது. முதல் பாதி சிரிப்பு வெடி. இரண்டாம் பாதி படு சென்சிபிள் பிட்ச். டோட்டலி சாரு ஸ்கிரிப்ட். எழுத்திலும், இலக்கிய ஆடுகளத்திலும் காணும் சாரு அல்ல அவர் நிஜத்தில். ரைட் ஒப்போசிட். படு ஜாலியான ஆள். ஆனால், அந்தப் பேச்சு மெசினை ஸ்டார்ட் செய்யும் சூட்சுமம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். … Read more

குருஜி : ராம்ஜி நரசிம்மன்

இன்று முகநூலில் ராம்ஜி நரசிம்மனின் கீழ்க்கண்ட பதிவைப் படித்தேன். இந்த குருஜியிடம் தான் பழகிய அனுபவங்களை இது போன்ற 300 சம்பவங்களைக் கொண்டு அவர் விவரித்திருக்கிறார். அதையெல்லாம் ஒரு நாவலாக எழுதலாம் என்று இருந்தேன், Source ராம்ஜி என்று போட்டு. ஆனால் தாமதப்படுத்தி விட்டேன் போல. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இப்போது ராம்ஜியே அந்த நாவலை எழுதி விடுவார் போல் தெரிகிறது.  ஒரே ஒரு விஷயம்.  வாழ்கை.  அது ஏன் என் நண்பர்களில் பலர் வாழ்கை … Read more

பூச்சி – 18

ஜெயமோகன் பள்ளி, சாரு நிவேதிதா பள்ளி என்றெல்லாம் குறிப்பிட்டேன்.  அதில் சில விஷயங்களைக்  குறிப்பிட மறந்து போனேன்.  ஜெ. பள்ளி ஊட்டி கான்வெண்ட் மாதிரி.  எஸ்.ரா. பள்ளி டூன் ஸ்கூல்.  அது பற்றிப் பேசவே நமக்குத் தகுதி இல்லை.  என்னுடைய பள்ளி ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளி.  ஆனால் இதிலும் பல பிராமணர்கள் படிப்பதுண்டு.  நிஜமான ஆதி திராவிடர் பள்ளியில் அய்யங்கார் பையனான அராத்து பதினொன்னாங்கிளாஸ் வரை படிக்கவில்லையா, அது போல.  ஆனால் அப்படிப் படிக்கும் பிராமணர்கள் … Read more

பூச்சி 17

”நியாய சாஸ்திரம் செய்த கௌதம மஹரிஷிக்கு ‘அக்ஷபாதர்’ என்று ஒரு பேர். அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக்கொண்டே இருப்பாராதலால் வெளி உலகேம அவர் கண்ணுக்குத் தெரியாதாம். ஒருமுறை எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றில் விழுந்து விட்டாராம். அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணையும் வைத்து விட்டாராம்! பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பெயர் வந்தது என்று கதை.” இன்று மொபைலைப் பார்த்துக் … Read more

பூச்சி – 16

நேற்று முழுநாளும் பூச்சியின் பக்கம் வரவில்லை.  வர முடியாமல் வேறு ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தேன்.  இப்போது கொஞ்சம் எழுதி விட்டு அந்த வேலையின் பக்கம் போக வேண்டும். எல்லா உயிர்களும் பிரம்மத்தின் அம்சங்களே.  ஒரு கூழாங்கல் கூட ஏதோ ஓர் அர்த்தத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாக நம் காலடியில் கிடக்கிறது.  இது பற்றிய ஒரு வசனத்தை ஃபெலினியின் La Strada (தெரு) படத்தில் காணலாம்.  அப்படியானால் கூழாங்கல்லும் வைரமும் ஒன்றா?  என்னைப் பொறுத்த வரை … Read more