பூச்சி 40

வரலாற்றுத் தகவல்களைக் கொடுக்கும்போது அந்தக் காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் கதைச் சுருக்கம் என்று போடுவார்களே அதை விடவும் கம்மியான அளவில்தான் விபரங்களைத் தெளித்துச் செல்கிறேன்.  இல்லாவிட்டால் இந்த நூல் ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விடும்.  உதாரணமாக, ஸ்பெய்னிலிருந்து தென்னமெரிக்கா சென்ற பாதிரியார்களில் ஒருவரான பார்த்தொலோமெ தெ லாஸ் காஸாஸ் (Bartolome de Las Casas) எழுதிய A Brief Account of the Destruction of the Indies என்ற 50 பக்க புத்தகத்திலிருந்து ஒரு … Read more

யானையைத் தின்பது : வளன்

ஒரு யானையைத் தின்பது எப்படி? பொறுமையாக  ஒரு வேளைக்கு ஒரு கடி. இப்படி யானையைத் தின்பது போலதான் இந்த மரணத்தின் நாட்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. சுத்தமாக இருக்கச் சொல்லி எங்கிருந்தோ உத்தரவு வருகிறது பத்து நபர்களுக்கு மேல்  யாரும் சேர்ந்திருக்கக் கூடாது என்கிறார்கள் தனித்திருக்கச் சொல்கிறார்கள் இருமினாலோ தும்மினாலோ அனைத்து கண்களும் பயத்தையும் சந்தேகத்தையும் உமிழ்கின்றன மூடப்பட்ட வழிபாட்டுத்தலங்களில் கடவுளர்கள் தனிமையிலிருக்கிறார்கள் எப்போது மாறும் இந்த நிலை  என்பதுதான் பலரது கேள்வி. இந்த நிலை மாறும் இன்னொரு … Read more

பூச்சி – 39

முடிதிருத்தும் கலைஞர் பெயர் ரமேஷ் என்றா சொன்னேன்?  அடடா, தவறு.  ரமேஷ் என்ற பெயரிலும் ஒரு கலைஞர் இருக்கிறார்.  நான் குறிப்பிட்டது மகேஷ்.  நேற்று எழுதியதை நான் திரும்பப் படிக்கவில்லை.  ஆனால் கனவில் நான் எழுதியது ரமேஷ் என்று புலப்பட்டது.  இப்படி பகலில் செய்யும் தவறுகள் இரவில் கனவில் சுட்டிக்காட்டப்படும்.  உங்களுக்கும் இப்படி நடக்குமா தெரியவில்லை.  எனக்குப் பல முறை நடந்துள்ளது.  ரமேஷ், மகேஷ் இருவருமே கலைஞர்கள்.  இருவருமே ஜெமினி அருகில் முடிதிருத்தகம் வைத்திருக்கிறார்கள்.  இருவருமே வி.ஐ.பி.  … Read more

பூச்சி – 38

புவி என் நெடுநாள் தோழி.  அவர் என்னுடைய சமீபத்திய பூச்சி கட்டுரைகளைப் படித்து விட்டு “நீங்கள் ரொம்பவும் மென்மையாகி விட்டீர்கள்.  ரெண்டு பத்திகளைத் தாண்டிய பிறகுதான் நீங்கள் அவரைப் பாராட்டவில்லை, விமர்சிக்கிறீர்கள் என்றே தெரிய வந்தது.  முன்பெல்லாம் முதல் வாக்கியத்திலேயே சொருகி எடுத்தால் குடல் வெளியே சரிந்து விடும்.  அதோடும் விடாமல் அந்தக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு ருத்ர தாண்டவம் வேறு.  பார்க்க ஜோராக இருக்கும்.  அந்த சாரு இப்போது இல்லை.  அது … Read more

பூச்சி – 37

கறுப்பன் எழுந்து கொள்ள முயற்சித்தான்.  ம்ஹும்.  முடியவில்லை.  அச்சமும் நடுக்கமும் அவமானமும் அவனைத் தரையிலேயே ஆணி அடித்தாற்போல் வைத்து அழுத்தியது.  பிறகு அந்தத் தேன்குரலைக் கேட்டான். “த்ரிஸ்த்தான்…” இந்தக் கோவிலுக்கு வெளியே வேறோர் காலத்தில் இதேபோல் அவன் அழைக்கப்பட்டிருக்கிறான்.  அப்படியானால் இது கனவு அல்ல; நனவுதான்.  சீமாட்டிதான் வந்திருக்கிறாள்.  தன் அருகே தெரியும் அவள் கால்கள் உண்மைதான்.  அவன் பதில் சொல்லியாக வேண்டும்; அல்லது சாக வேண்டும்.  அவன் பேசியே ஆக வேண்டும்.  அவனிடம் வந்து சேர்ந்த … Read more

பூச்சி – 36

க்ரனாடா நாவலை எழுதியவர் ராத்வா அஷூர்.  இடதுசாரி.  கெய்ரோவில் 1946-இல் பிறந்தார்.  அதே ஆண்டில்தான் அந்நகரின் புகழ்பெற்ற அப்பாஸ் பாலத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் நடந்தது.  ஒரு பக்கம் நைல் நதி – எதிர்ப் பக்கம் துப்பாக்கிச் சூடு என்ற நிலையில் அன்றைய தினம் பல நூறு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  சிறு வயதிலிருந்தே கலக மனோபாவம் கொண்டிருந்த ராத்வா அஷூர் தன் 14-ஆம் வயதில் … Read more