2. நிழலிலி

1 வாழ்நாள் எல்லாம் எழுதுகிறேன் சிலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை 2 பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகக் குடித்தேன் குடிகாரன் என்றார்கள் தனிமையை விரட்டப் பெண்கள் நாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஆயிரம் நிழல்கள், ஆயிரம் கவலைகள் எனக்கே எனக்கென ஒருத்தி கிடைத்தாளில்லை கிடைத்தவளும் அன்பைக் கையிலெடுத்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி அடித்தாள் படுகாயமுற்றேன். 3 கேட்டதைக் கொடுக்கும் என் கர்த்தாவிடம் ’அதிகாலையின் ஆதவனைப் போல நிலவின் சஞ்சாரத்தைப் போல நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் போல தென்றலின் இனிமையைப் போல குழந்தையின் முதல் … Read more